| நீரகல மளந்தோய் நீ நிழறிகழைம் படையோய் நீ |
இவை 22முச்சீ ரோரடி நான்கு அம்போதரங்கம். |
(1) | 'ஊழி நீ | (2) | உலகு நீ |
(3) | உருவு நீ | (4) | யருவு நீ |
(5) | ஆழி நீ | (6) | யருளு நீ |
(7) | அறமு நீ | (8) | மறமு நீ'. |
இவை 23இருசீ ரோரடி யெட்டு அம்போதரங்கம். |
என வாங்கு, |
இது தனிச்சொல். |
| 'அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன் தொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற் கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப் புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன் தொன்று முதிர்கட லுலக முழுதுடன் ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே.' |
இஃது ஆசிரியச் சுரிதகம். |
இஃது எட்டும் பதினாறும் என்று சொல்லப்பட்ட முச்சீரடியும் இருசீரடியும் நான்கும் எட்டுமாய்ச் சிறப்பில்லாத எண்ணடியான் வந்த அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா. எட்டும் பதினாறுமாய் வருவன யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க. ('நலங்கிளர்......ஓங்குக வெனவே' சூ. 83. மேற்.) |
| 'அரவொன்று மல்குல்' என்பது மகடூஉ முன்னிலை. 'நீர்த்திரை போல நிரலே முறைமுறை ஆக்கஞ் சுருங்கி யசையடி தாழிசை விட்டிசை விரியத் தொடுத்துச் சுரிதகம் 24 தாங்கிச் தழுவுந் தரவினோ டைந்தும் யாப்புற் றமைந்தன வம்போ தரங்கம்' |
என்றார் காக்கை பாடினியார். |
|
(பி - ம்.) 22. இடையெண். 23. சிற்றெண். 24. தாக்கித் தொடுத்த |