உதாரண முதனினைப்பு |
| [வாணெடுங் கண்பனி நேரிசை யாகும் மதர்த்திருண்டு சேணுற 25வோடிக் குழையிட றிச்செருச் செய்யும்விழி நாணுந் திருவு மறிவுஞ் செறிவு முடையநல்லாய் ஏணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்னே. |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே முன்வந்த இலக் கியங்களை முதனினைத்துக் கொள்க.] |
(10) |
|
(பி - ம்.) 25. நீண்டு குழைமீது பாய்ந்து செயிர்த்துழைக்கண் நாணுற வண்குமி ழிற்சேரு மொண்க ணறு நுதலாய் காணுங் கெடலரு மாமுனி யம்போ தரங்கமென்றே.' |
- - - - |
வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா |
| 31. அசையடி முன்ன ரராகம்வந் தெல்லா வுறுப்புமுண்டேல் வசையறு வண்ணக வொத்தா ழிசைக்கலி வான்றளைதட் டிசைதன தாகியும் வெண்பா வியைந்துமின் பான்மொழியாய் 1 விசையறு சிந்தடி யாலிறு மாய்விடின் வெண்கலியே. |
இ - கை. வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவும் வெண் கலிப்பாவும் ஆமாறுணர்த்....று |
'அசையடி முன்னர் அராகம் வந்து எல்லா வுறுப்புமுண்டேல் வசையறு வண்ணக வொத்தாழிசைக் கலி' எ - து. அம்போதரங்க வுறுப்புக்கும் தாழிசைக்கும் நடுவே அராகவுறுப்புப் பெற்றுத் தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்பினையும் உடைத்தாய் வருமெனின் அது வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும் எ - று. |
(1) அராகம் எனினும், 2அடுக்கியல் எனினும், முடுக்கியல் எனினும், வண்ணகம் எனினும் ஒக்கம். [என்னை? |
|
(1) அராகம் - முடுகிச் சொல்லும் ஓசையை யுடையது. அடுக்கியல் - கருவிளச் சீர்களே பெரும்பாலும் பயின்று ஓசையடுக்குடன் இயல்வது. வண்ணகம் - முடுகியலோசையாகிய சந்தத்தை யுடையது. |
|
(பி -ம்.) 1. விசையுறு. 2. அடுக்கிசை. |