| 'அராக மென்ப தடுக்கியல் வண்ணகம் முடுக்கிய லெனவும் மொழிந்தனர் புலவர்' |
என்றார் ஆகலின்.] |
'வசையறு வண்ணகம்' என்று சிறப்பித்தவதனால் அராக வுறுப்புத்தான் அளவடி முதலாகிய எல்லாவடியானும் வரப்பெறும் எனக் கொள்க. |
அடி வரையறையாவது : சிறுமை நான்கடியானும், பெருமை எட்டடியானும், இடை ஐந்தடியானும் ஆறடியானும் ஏழடியானும் வரப்பெறுமெனக் கொள்க. என்னை? |
| 'அளவடி முதலா வனைத்தினு நான்கடி முதலா 3விரட்டியு முடுகிய னடக்கும்' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
| 'விளங்குபணிப் பசும்பொன்னின் 4விரித்தமைத்துக் கதிர்கான்று துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர நறும்பைந்தார்ப் பரூஉத்தடக்கை மதயானைப் 5பணையெருத்தின் 6மிசைத்தோன்றிக் குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண் மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்குத் தாயாகித் தலையளிக்குந் தண்டுறை 7யூரகேள் ; |
இது தரவு. |
| 'காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி மாட்சியாற் 8றிரியாத மரபொத்தாய் கரவினாற் பிணிநலம் 9பிரிவெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய அணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ ; 'அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப் பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப் பெருவரைத்தோ ளருளுவதற் கிருளிடைத் தமியையாய்க் கதிர்வளைத்தோள் 10கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ ; |
|
(பி - ம்.) 3. விரட்டிசை. 4. விசித்தமைத்துக். 5. பகட்டெழினெரி குஞ்சிக். 6. மிசைத்தோன்றுங். 7. யூரநீ. 8. றணியாத, பிரியாத. 9. பெரிதெய்திப், பீரெய்தப். 10. குளிர்ப்பிக்கும், அதிர்ப்பிக்கும், வளைப்பிக்கும். பெரிதெய்தப், |