செய்யுளியல் 'தரவே தரவிணை'

117

 
     'கொச்சகமே' எ - து - இறுதி விளக்கெனக் கொள்க.
 
     அவற்றுக்குச் செய்யுள் வருமாறு :
 
'செல்வப்போர்க் கதக் கண்ணன்'

(கா. 11, மேற்)

என்பது தனிச்சொல்லும் சுரிதகமும் இல்லாத தன்றளையான் வந்த தரவு கொச்சகக்
கலிப்பா.
 
  'குடநிலைத் தண்புறவிற்......சென்றவாறே'

(கா. 21, மேற்.)
 

என்பது தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவு கொச்சகக் கலிப்பா.
 

'வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம்
கொடிபடு 2மணிமாடக் கூடலார் கோமானே.
 
இது தரவு.

எனவாங்கு,

இது தனிச்சொல்.
 
  2'துணைவளைத்தோ ளிவண்மெலியத் தொன்னலந் துறப்புண்டாங்
கிணைமலர்த்தா ரருளுமே லிதுவிதற்கோர் மாறென்று
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ.
 
இது தரவு.

அதனால்,

இது தனிச்சொல்.
 
  'செவ்வாய்ப் பேதை யிவடிறத்
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே'
 
இது சுரிதகம்.
 
     இஃது இடையிடை தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தால் இற்ற தரவிணைக் கொச்சகக்
கலிப்பா.
 
     இனிச் சுரிதகம் இல்லாத தரவிணைக் கொச்சகக் கலிப்பா வந் துழிக் கண்டு
கொள்க.
 
  (3)'பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்
தோன்றிக், குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்
 

     (3)குரூஉக் கொண்ட - நிறத்தைக் கொண்ட. உச்சியார்....தேவர். அருவரையால் -
பெருமை பொருந்திய மலையினால். பகை - இந்திரன் ஆயர் மீது
 

     (பி - ம்.) 2. வரைமார்பிற். வரைமாடக்.