'மதிமருட்டும் சிறுநுதல் பேர் அமர்க்கண் செய்ய வாய் ஐய நுண்ணிடையாய் எ-து. மகடூஉ முன்னிலை. என்னை? |
| 'இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினு மென்றும் அடங்காதா ரென்று மடங்கார் - தடங்கண்ணாய் உப்பொடு நெய்பா றயிர்காயம் பெய்தடினும் கைப்பறா பேய்ச்சுரையின் காய்' |
(நாலடி. 116.) |
எனப் பிறரும் தடங்கண்ணாய் என்று இடையே (9) மகடூஉ முன் னிலை சொல்லினாரும் உளரெனக் கொள்க. |
மதி என்பது ஈண்டுப் 7பிறை; அஃது, |
| (10) இருகோட் டொருமதி யெழில்பெற மிலைச்சினை' |
(நக்கீரர் திருவெழுகூற்) |
என்றாற்போலக் கொள்க. அல்லதூஉம், (11) அறிவினை மயக்குஞ் சிறுநுதன் முதலாகிய உறுப்புக்களை உடையாய் என்றுமாம். |
'அறிஞர் உரைத்த அளபும்' எ-து புலவராய் சொல்லப்பட்ட அளபெடைகளும் எ-று. |
அளபெனினும் அளபெடை எனினும் புலுதம் எனினும் ஒக்கும். என்னை? |
| 8 'அளபே புலுத மாயிரு பெயரும் அளபெடை யென்பரறிந்திசி னோரே' |
என்றார் ஆகலின். அவை போக்கிச் சொல்லுதும். |
அசைக்கு உறுப்பாவன எ-து. இப்பதின்மூன்று 9 திறத்தெழுத்தும் அசைக்கு உறுப்பாவன எ-று. |
|
(9) இலக்கணப் பாவில் மகடூஉ முன்னிலை வந்தமைக்கு உதாரணமாக இலக்கியச் செய்யுளில் அது வந்தமையைக் காட்டியது அத்துணைச் சிறப்பன்று போலும். (10) பிறையை மதி என்றமைக்கு இஃது உதாரணம்; மதி-பூர்ண சந்திரன்; பிறையின் இரு நுனிகளையும் கோடு என்றார். இருகோடும் ஒன்றுகூடின் மதியமாம்; 'கோடுகூடு மதியம்' (புறநா. 67:4.) (11) நுதல் அறிவினை மயக்குதல் : 'பிறையென, மதிமயக் குறூஉ நுதலும்' (குறுந். 226); 'ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள், நண்ணாரு முட்குமென் பீடு' (குறள். 1088.) |
|
(பி - ம்.) 7. பிறையை. 8. அளபொடு புலுத, அளபே புலுத; 9. வகை யெழுத்துக்களும் |