| '(2) வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங் கேள்வரும் போழ்தி னெழால்வாழி வெண்டிங்காள் கேள்வரும் போழ்தி 4னெழாதாய்க் குறாலியரோ 5நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள். |
இது ஈற்றடி மிக்கு ஏனையடி மூன்றும் ஒத்துத் தனியே வந்த கலித்தாழிசை. |
| 'பூண்ட பறையறையப் பூத மருள நீண்ட சடையா னாடுமே நீண்ட சடையா னாடு மென்ப மாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே.' |
இஃது இரண்டாமடி குறைந்து, ஈற்றடி மிக்கு முதலடியும் மூன்றாமடியும் ஒத்து வந்தமையால், ஈற்றடி மிக்கு, ஏனையடிகள் ஒவ்வாது வந்த கலித்தாழிசை. |
| 'அடியெனைத் தாகியு மொத்துவந் தளவினிற் கடையடி மிகுவது கலித்தா ழிசையே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 87.) |
| 'அந்தடி மிக்குச் சிலபல வாயடி தந்தமு ளொப்பன தாழிசை யாகும்' |
என்றார் காக்கை பாடினியார். |
'கலித்துறையே நெடிலடி நான்காய் நிகழ்வது' எ - து. ஐஞ்சீரடி நான்காய் [ஒத்து] வருவது (3) கலித்துறை எ - று. |
வரலாறு |
| 'யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் |
|
(2) கேள் - உறவினர் ; என்றது தலைவனை. எழால் - தோன்றாதே. உறாலியர் - உறாது ஒழிக. (3) கலித்துறை : இது கலிநிலைத்துறை என்றும், காவியங்களிற் பயின்று வருவதனால் காப்பியக்கலித்துறை என்றும் வழங்கும். ஐஞ்சீரடி நான்காய் எழுத்தெண்ணித் தொடுக்கப்படும் கட்டளைக்கலித்துறை இதனின் வேறுபட்டது. இதனுடைய இலக்கணத்தைக் காரிகை 1, உரையிற் காண்க. |
|
(பி - ம்.) 4. னுறாதாய்க், னெழாலாய்க். 5. நீள்வரை. |