| தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற் கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே.' 'வென்றான் வினையின் ....நீங்கி நின்றார்.' |
(கா. 13, மேற்.) |
இவை நெடிலடி நான்காய் வந்தமையாற் கலித்துறை. |
| 'நெடிலடி நான்காய் நிகழ்வதுகலித்துறை' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 88.) |
| 'ஐஞ்சீ ரடியி னடித்தொகை நான்மையோ டெஞ்சா தியன்றன வெல்லாங் கலித்துறை' |
என்றார் காக்கை பாடினியார். |
'நேரடி ஈரிரண்டாய்விடின் அதுவாகும் விருத்தம்' எ - து. நாற்சீரடி நான்காய் வருமெனின் அது கலிவிருத்தம் எ - று. |
| 'அளவடி நான்கின கலிவிருத் தம்மே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 89.) |
| நாலொரு சீரா னடந்த வடித்தொகை ஈரிரண் டாகி யியன்றன யாவையுங் காரிகை சார்ந்த கலிவிருத் தம்மே' |
6 என்றார் காக்கை பாடினியார். |
வரலாறு |
| 'வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின் ஆய்தலி னொண்சுட ராழியி னான்றமர் வாய்தலி 7னின்றனர் வந்தென மன்னன்முன் நீதலை நின்றுரை நீள்கடை காப்போய், |
(சூளா, சீயவதைச். 87.) |
| 'தேம்பழுத் தினிய......தவள மாடமே.' |
(கா. 13, மேற்,) |
இவை நாற்சீர் நாலடியாய் வந்தமையாற் கலிவிருத்தம். |
'திருத்தகு மெல்லியலே' எ - து. மகடூஉ முன்னிலை. |
|
(பி - ம்.) 6. என்றாரு முளரெனக் கொள்க. 7. னீடினர். |