128

யாப்பருங்கலக் காரிகை

 

உதாரண முதனினைப்பு

[கொய்நினை யாய்தினை மென்றினை வாள்வரி 8பூண்ட பறை
எய்திய தாழிசை யானும்வென் 9றானுங் கலித்துறையே
மைதிக ழோதி 10வடிவே னெடுங்கண் வனமுலையாய்
மெய்திகழ் வேய்தலை தேம்பழுத் 11தென்ப விருத்தங்களே.
 
      இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே கலித்தாழிசை கலித்துறை
கலிவிருத்தங்கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.]
 

     (பி - ம்.) 8. பூண்டகலிக் கெய்திய. 9. றான்றுறையேவிருத்தம். றானுந்
துறைவிருத்தம். 10. வரிநெடுங் கண்ண வனமுலையாய், வரிநெடுங்கண்வன
மென்முலையாய், 11. தாமென்று வேண்டுவரே.
 

வஞ்சிப்பாவும் இனமும்

  34. குறளடி நான்கின மூன்றொரு தாழிசை கோதில்வஞ்சித்
துறையொரு வாது தனிவரு மாய்விடிற் சிந்தடிநான்
கறைதரு காலை யமுதே விருத்தந் தனிச்சொல்வந்து
மறைதலில் வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே.
 
     இ - கை. வஞ்சித்தாழிசையும் வஞ்சித்துறையும் வஞ்சி விருத்தம் வஞ்சிப்பாவுக்கு
ஈறு ஆமாறும் உணர்த்....று.
 
     'குறளடி நான்கின மூன்று ஒரு தாழிசை' எ - து. இரு சீரடி நான்காய் மூன்று
செய்யுள் ஒரு பொருண் மேல் அடுக்கி வருமெனின் அது வஞ்சித் தாழிசை எனப்படும்.
எ - று.
 
     'கோதில்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் அவை ஒரு பொருண் மேல்
மூன்றடுக்கி வரினே தாழிசை யாவதெனக் கொள்க.
 
'குறளடி நான்கவை கூடின வாகி
முறைமையி னவ்வகை மூன்றிணைந் தொன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை யாகும்'
என்றார் காக்கை பாடினியார்.
 

வரலாறு

  'மடப்பிடியை மதவேழம்
தடக்கையான் வெயின்மறைக்கும்.