செய்யுளியல் ' குறளடி நான்கின '

129

 
இடைச்சுர மிறந்தார்க்கே
நடக்குமென் மனனேகாண்.

'பேடையை யிரும்போத்துத்
1தோகையால் வெயின்மறைக்கும்
காடக மிறந்தார்க்கே
ஓடுமென் மனனேகாண்.

'இரும்பிடியை யிகழ்வேழம்
பெருங்கையான் வெயின்மறைக்கும்
அருஞ்சுர மிறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண்.'
 
      இவை இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்றக்கி வந்தமையால் வஞ்சித்
தாழிசை.
 
     'கோதில் வஞ்சித் துறை ஒருவாது தனிவருமாய்விடின்' எ - து. இருசீரடி
நான்காய் ஒரு பொருண்மேல் ஒன்றே வரின் அது வஞ்சித்துறை எனப்படும் எ - று.
 

வரலாறு

  'மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் கரதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்.'

'திரைத்த சாலிகை......................மாலையாய்.'

(கா. 13, மேற்.)
 

     இவை இருசீரடி நான்கினால் ஒரு பொருண்மேல் தனியே வந்தமையால்
வஞ்சித்துறை எனக் கொள்க.
 
  'குறளடி நான்மையிற் கோவை மூன்றாய்
வருவன வஞ்சித் தாழிசை தனிவரிற்
றுறையென மொழிப துணிந்திசி னோரே'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 91,)
 
  ['ஒன்றின் னான்மையு முடைத்தாக் குறளடி
வந்தன வஞ்சித்துறை யெனலாகும்.']
 
என்றாரும் உளரெனக் கொள்க.
 

     (பி - ம்.) 1. கோடையால்.