உறுப்பியல் 'குறினெடிலாவி'

13

 
     ஆவனவே; ஏகாரம்; ஈற்றசை யேகாரம்; தேற்றம் எனினும் அமையும். என்னை?
 
'தேற்றம் வினாவே பிரிநிலை யெண்ணே
ஈற்றசை யிவ்வைந் தேகா ரம்மே'
 
என்றார் ஆகலின்.
 

(சிதால். சொல். சூ. 252.)
 

  'குறினெடி லளபெடை யுயிருறுப் புயிர்மெய்
வலிய மெலிய விடைமையோ டாய்தம்
இ உ ஐ யென் மூன்றன் குறுக்கமோ
டப்பதின் மூன்று மசைக்குறுப் பாகும்'
 
என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க.
 
     இனி மூவுயிர்க் குறுக்கமும் அளபெடைகளும் ஆமாறு சொல்லுதும்:
 
     அவற்றுட் குற்றிய லுகரம் வருமாறு : நெடிற்கீழும், நெடி லொற்றின் கீழும்,
குறிலிணைக் கீழும், குறிலிணை யொற்றின்கீழும், குறினெடிற்கீழும், குறினெடி லொற்றின்
கீழும், குற்றொற்றின் கீழும் என்று இவ்வேழிடத்து ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து
உகரம் வந்தால் அது குற்றிய லுகரம் என்று வழங்கப்படும் எனக் கொள்க. என்னை?
 
  'நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை
ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்
(12) றேழ்குற் றுகரக் கிடனென மொழிப'
(13) எழுவகை யிடத்துங் குற்றிய லுகரம்
வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு
 

     நாகு, காசு, காடு, காது, காபு, காறு என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும்
ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 

     (12) எழுவகை என்பதைப் பலர் மறுப்பர்: 'இதனை ஏழென்று கொள்வார்க்குப்
பிண்ணாக்கு, சுண்ணாம்பு, ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க' (தொல். எழுத்.
சூ. 406, 320.) சிவஞான முனிவரும் இங்ஙனமே கூறுவர்; நன். சூ. 94.
 

     (13) இது பல்காயனார் வாக்கு என்பார்; யா. வி. சூ. 2, உரை.