மருட்பா |
| 35. பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த் தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால் வண்பான் மொழிமட வாய்மருட் பாவென்னும் வையகமே. |
இ....கை. புறநிலை வாழ்த்து மருட்பாவும், கைக்கிளை மருட்பாவும், வாயுறை வாழ்த்து மருட்பாவும், செவியறிவுறூஉ மருட் பாவும் ஆமாறு உணர்த்....று. |
இதன் பொழிப்பு : புறநிலை வாழ்த்தும், கைக்கிளையும், வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉம் என்னும் நான்கு பொருண்மேலும் வெண்பா முதலாக ஆசிரியம் ஈறாக வருமெனின் அதனை மருட்பா வென்று வழங்குவர் புலவர் எ -று. |
| 'வண்பால் மொழி மடவாய்' எ - து. மகடூஉ முன்னிலை. வெள்ளை முதலா வாசிரிய மிறுதி கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்' [கலிநிலை வகையும் வஞ்சி யும்பெறா] |
1என்றார் காக்கைபாடினியார். |
வரலாறு |
(புறநிலை வாழ்த்து மருட்பா) |
| (2) தென்ற லிடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை முன்றின் முகைவிரியு முத்தநீர்த் தண்கோளூர்க் குன்றமர்ந்த கொல்லேற்றா 2னிற்காப்ப வென்றுந் தீரா நண்பிற் றேவர் சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே:' |
இது 'வழிபடு தெய்வம் நிற் புறங்காப்பப் பழிதீர் செல்வ |
|
(1) இவ்வடி தொல். பொருள், சூ. 422 இன் ஈற்றடியாகவும் காணப்படுகிறது. (2) கொல் லேற்றான் - சிவன். இப்பாட்டின் ஈற்றிலுள்ள இரண்டும் ஆசிரியவடிகள். தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்தலின் இது புறநிலை வாழ்த்தாயிற்று. |
|
(பி - ம்.) 1. என்றார் ஆகலின். |