136

யாப்பருங்கலக் காரிகை

 
வெண்பா வியலினு மாசிரிய வியலினும்
பண்புற முடியும் 8பாவின வென்ப'

(பொருள். சூ. 473.)
 

என்றார் தொல்காப்பியனார்.
 
     'பண்பார் புறநிலை' என்றும், 'ஒண்பாச் செவியறிவு' என்றும் சிறப்பித்தவதனால்,
புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉம் இவ்வாறன்றி
வெண்பாவேயாயும் ஆசிரியமேயாயும் வரப்பெறும்; கலியும் வஞ்சியுமாய்
வரப்பெறாவெனக் கொள்க.
 
     'ஊனமில்லா வெண்பா' என்று சிறப்பித்தவதனால் வேற்று வண்ணம் விரவாது
வெள்ளை வண்ணம் எல்லா வண்ணத்துள்ளுஞ் சிறப்புடைத்தாய் மங்கலமரபிற்றாய்
அவ்வாறே வேற்றுத் தளையும் அடியும் விரவாமையின் எல்லாப் பாவினுள்ளும்
வெண்பாச் சிறப் புடைத்தென்று முன்வைக்கப்பட்டது என்று கொள்க.
 
  'வேதவாய் மெய்ம்மகனும் வேந்தன் மடமகளும்
நீதியாற் சேர்ந்து நிகழ்ந்த நெடுங்குலம்போல்
(9) ஆதிசால் பாவு மரசர் வியன்பாவும்
ஓதியவா றோத மருட்பாவென் றோங்கிற்றே.'

'பண்ணுந் திறமும்போற் பாவு மினமுமாய்
வண்ண விகற்ப வகைமையாற் - பண்மேற்
றிறம்விளரிக் கில்லதுபோற் செப்ப லகவல்
இசைமருட்கு மில்லை யினம்.'

[' தென்ற லிடையுந் திருநுதல் வேர்வும் பலமுறையென்
றொன்றிய பாவும்பல் யானையு மென்பவொண் போதமர்ந்த
பொன்றிக ழோதி புறநிலை கைக்கிளை வாயுறைவாழ்த்
தென்றிவற் றிற்குஞ் செவியறி விற்கு மிலக்கியமே.'
 
     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே மருட்பா நான்கிற்குங் காட்டிய
இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.
 

3. செய்யுளியலோத்து முற்றும்.
 


     (9) ஆதிசால்பா - அந்தண சாதிப்பா ; என்றது வெண்பாவை. அரசர் வியன்பா -
ஆசிரியப்பா.
 

     (பி - ம்.) 8. பாங்கினவாகும்.