14

 யாப்பருங்கலக் காரிகை

 
     நாக்கு, காச்சு, காட்டு, காத்து, காப்பு, காற்று என நெடி லொற்றின்கீழ் ஆறு
வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 
     வரகு, முரசு, முருடு, மருது, துரபு, கவறு எனக் குறிலிணைக் கீழ் ஆறு
வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 
     அரக்கு, பொரிச்சு, தெருட்டு, குருத்து, பொருப்பு, சிரற்று எனக்
குறிலிணையொற்றின் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 
     அசோகு, பலாசு, மலாடு, கொடாது, புதாபு, விராறு எனக் குறினெடிற் கீழ் ஆறு
வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 
     தமாக்கு, தடாச்சு, பனாட்டு, கொடாத்து, புதாப்பு, விராற்று எனக்
குறினெடிலொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 
     நக்கு, கச்சு, கட்டு, கத்து, கப்பு, கற்று எனக் குற்றொற்றின் கீழ் ஆறு
வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.
 
     குற்றியலுகர வெழுத்து ஆறுவகைப்படும் என்பாருமுளர். அவையாவன:
ஈரெழுத்தொருமொழி, உயிர்த்தொடர்மொழி இடைத்தொடர் மொழி, வன்றொடர் மொழி,
மென்றொடர் மொழி, ஆய்தத் தொடர் மொழி என்றிவை. என்னை?
 
  'ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்'
 
என்றார் ஆகலின்.
 

(தொல். எழுத். சூ. 406.)
 

     இனிக் குற்றியலிகரத்துக்குச் சொல்லுமாறு :
 
     குற்றியலுகரம் திரிந்தும் திரியாதும் யகரமோடு இயைபின் கண் வந்த இகரம்
குற்றிய லிகரமென்று வழங்கப்படும் எ-று. என்னை?