142

யாப்பருங்கலக் காரிகை

 
  [' இஉ இரண்டின் குறுக்கத் தளைதப
நிற்புழி யொற்றாம் நிலைமைய வாகும்'
'உயிரள பேழு முரைத்த முறையான்
வருமெனி னவ்வியல் வைக்கப் படுமே'
 
என்றார் காக்கைபாடினியார்.]
 
'தளைசீர் வண்ணந் தாங்கெட வரினே
குறுகிய விகரமுங் குற்றிய லுகரமும்
அளபெடை யாவியு மலகியல் பிலவே
என்பது யாப்பருங்கலம் (சூ. 4.)
 
      'ஐகாரம் நைவேல் ஓருங் குறிலியல்' எ - து. ஒன்றரை மாத்திரை என்று
ஓதப்பட்ட, ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தே போலக் கொண்டு அலகிடப்பெறும் எ-று.
'ஓரும்' என்பது இடைச்சொல்.
 
'குறுமை யெழுத்தி னியல்பே யைகாரம்
நெடுமையி னீங்கியக் கால்'
 
எனவும்,
  'ஈறு மிடையு மிணைந்து மிணையசை
யாகுமை யென்ப வறிந்திசி னோரே'

(யா - வி. 9)

எனவுஞ் சொன்னார் ஆகலின்.
 
8 'அன்னையை நோவ தவமா லணியிழாய்
9 புன்னையை நோவன் புலந்து.'

' (8) நடைக்குதிரை யேறி நறுந்தார் வழுதி
அடைப்பையாய் கோறா வெனலும் - அடைப்பையான்,
சுள்ளற் சிறுகோல் கொடுத்தான் 10 றனைப்பெறினும்
கொள்ளாதி யாங்காண் டலை.'
'கெண்டையை வென்ற கிளரொளி யுண்கணாள்
பண்டைய ளல்லள் படி.'
     இவற்றுள் ஐகாரக் குறுக்கம் குற்றெழுத்தே போலக் குறிலோடும் நெடிலோடும்
கூடி நின்று நிரையசை யாயின.
 

     (8) அடைப்பையான் - வெற்றிலை பாக்குப் பெட்டியைத் தூக்கு பவன். கோல் தா
எனலும். சுள்ளற் சிறு கோல் - சுள்ளென்று அடிப்பதற்கு ஏற்ற வளைந்த கோல்.
அதன்வேகம் நாம் காண்டலைக் கொள்ளாது.
 

     (பி - ம்.) 8. அன்னையையா னோவ தெவன்மா. 9. புன்னையை யானோ'
10. றலைப்பெறினும், எள்ளாதியாங்கண்டிலம்.