144

யாப்பருங்கலக் காரிகை

 

அசையின் புறனடை

  37. விட்டிசைத் தல்லான் முதற்சுட் டனிக்குறி னேரசையென்
றொட்டப் படாததற் குண்ணா னுதாரண மோசைகுன்றா
நெட்டள பாய்விடி னேர்நேர் நிரையொடு நேரசையாம்
இட்டத்தி னாற்குறில் சேரி னிலக்கிய மேர்சிதைவே.
 
     இ - கை. ஒருசார் அசைகட்கு எய்தியதோர் இலக்கண முணர்த்....று.
 
     'விட்டிசைத் தல்லான் முதற்கண் தனிக்குறில் நேரசை என்று ஒட்டப்படாது'
எ - து. மேல் பொது வகையாய், தனிக் குறில் நேரசை என்றார் (கா. 1) ஆயினும், (1)
விட்டிசைத்து நின்றபொழுதல்லது மொழிக்கு முதற்கண் நின்ற தனிக் குற்றெழுத்து
நேரசை யாகாது. எனவே, விட்டிசையாத வழி மொழிமுதற்கண் தனிக்குறில், குறிலோடும்
நெடிலோடும் கூடி நிரையசையாம் என்பதாயிற்று.
 
     'அதற்கு உண்ணான் உதாரணம்' எ - து:
 

வெண்பா

  ' (2) உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும்.'

(நாலடி. 9.)
 

     இதனுள் அஆ என்புழி அருளின்கட் குறிப்பாய், விட்டி சைத்துக் குற்றெழுத்து
மொழிக்கு முதற்கண் நேரசையாயினவாறும், அல்லாத வழி பிறவற்றின் குறிலோடும்
நெடிலோடும் கூடி நிரையசை ஆயினவாறும் கண்டுகொள்க.
 

வெண்பா

  ' (3) வெறிகமழ் தண்புறவின் வீங்கி யுகளும்
மறிமுலை யுண்ணாமை வேண்டிற் - பறிமுன்கை
 

     (1) விட்டிசைத்தல் - வருமொழியோடு தொடர்தலின்றி வேறுபட்டு ஒலித்தல்

      (2) ஒளி என்பது தான் உளனாய காலத்து விளங்குதல்; புகழ் என்பது தான்
இறந்த பின்பும் உளதாம் பெயர். கொன்னே - பயனின் றியே, கொன்னே பொருள்
காத்திருப்பானேல்' என்று கூட்டுக.

      (3) புறவின் - முல்லை நிலத்தில். மறி - ஆட்டுக் குட்டி பறி - பனை