| 'ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி யாவையுந் தனிக்குறின் முதலசை யாகா சுட்டினும் வினாவினு முயிர்வரு காலை ஒட்டி வரூஉ மொருசாரு முளவே' |
என்றார் மயேச்சுரர். |
'ஓசை குன்றா நெட்டளபாய்விடின் நேர் நேர்' எ - து. நெட்டெழுத்து அளபெடுத்து வருமெனின் அஃது இரண்டு நேரசையாக வைக்கப்படும் எ - று. |
'ஓசை குன்றா' என்று மிகுத்துச் சொல்லியவதனால் மூன்று மாத்திரையின் மிக உச்சரிப்பினும் நேர் நேராக வைக்கப்படும் எ - று. |
'நிரையொடு நேரசையாம் இட்டத்தினால் குறில் சேரின்' எ - து. குற்றெழுத்தினோடு புணர்ந்த நெட்டெழுத் அளபெடுத்து வந்தால் அவை. [இரண்டினையும் கூட்டி] நிரையசையும், நேரசையுமாக வைக்கப்படும் எ - று. |
'இலக்கியம் ஏர் சிதைவே' எ - து. |
குறள் வெண்பா |
| ' (5) ஏஎர் சிதைய வழாஅ லெலாஅநின் சேயரி சிந்திய கண்' |
என்னும் இப்பாட்டு நேர் நேர் ஆதற்கும், நிரை நேர் ஆதற்கும். இலக்கியம் எனக் கொள்க. இதனுள் 'ஏஎர்' என்பது நேர் நேராயிற்று; அழாஅல்' என்பதும், 'எலாஅ' என்பதும் நிரை நேராயின. |
'இட்டத்தினால்' என்று சிறப்பித்தவதனால் பின்பு நின்ற குற்றெழுத்தினோடும் நெட்டெழுத்தினோடும் கூடி அளபெடை நிரையசை ஆகாதெனக் கொள்க. |
| 'தனிநிலை யளபெடை நேர்நே ரியற்றே இறுதிநிலை யளபெடை நிரைநே ரியற்றே' |
என்றார் பிறருமெனக் கொள்க. |
(2) |
|
(5) ஏஎர் - அழகு. அழாஅல் - அழாதே. எலாஅ - தோழியே. |