ஒழிபியல் 'மாஞ்சீர் கலியுட்'

147

 

சீர்க்கும் தளைக்கும் புறனடை

  38. மாஞ்சீர் கலியுட் புகாகலிப் பாவின் விளங்கனிவந்
தாஞ்சீ ரடையா வகவ லகத்துமல் லாதவெல்லாந்
தாஞ்சீர் மயக்குந் தளையுமஃ தேவெள்ளைத் தன்மைகுன்றிப்
போஞ்சீர் கனிபுகிற் புல்லா தயற்றளை பூங்கொடியே.
 
      இ - கை. சீருந் தளையுஞ் செய்யுளகத்து நிற்பதோர் முறைமை யுணர்த்....று.

      'மாஞ்சீர் கலியுட் புகா' எ - து - தேமா புளிமா என்னும் இரண்டு நேரீற்று
இயற்சீரும் கலிப்பாவினுட் புகப்பெறா எ - று.

      'கலிப்பாவின் விளங்கனி வந்து ஆம் சீர் அடையா' எ - து. கருவிளங்கனி
கூவிளங்கனி என்னும் நிரை நடுவாகிய வஞ்சியுரிச் சீர் இரண்டும் கலிப்பாவினுட்
புகப்பெறா எ - று.
 
     'அகவலகத்தும்' எ - து. ஆசிரியப்பாவினுள்ளும் கருவிளங்கனி
விளங்கனியென்னும் நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர் இரண்டும் புகப் பெறா எ - று.

     'அல்லாத எல்லாம் தாம் சீர் மயங்கும்' எ - து. ஒழிந்த சீர் எல்லாப்
பாவினுள்ளும் பாவினத்துள்ளும் புக்கு மயங்கப்படும் எ - று.

     'தளையும் அஃதே' எ - து. நான்கு பாவிற் றளையும் எல்லாப் பாவினுள்ளும்
பாவினத்துள்ளும் வந்து மயங்கப்படும் எ - று.
 
     'வெள்ளைத் தன்மை குன்றிப் போம் சீர் கனி புகில்' எ - து. எல்லாச் சீரும்
எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் புக்கு மயங்கப்பெறும் என்றார் ஆயினும்,
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி என்னும் வஞ்சியுரிச்சீர் நான்கும்
வெண்பாவினுட் புகப்பெறா, புகில் வெள்ளோசை யழிந்து வேறுபட்டு ஓசையுண்ணாது
கெடும் எ - று,

     'புல்லாது அயற்றளை' எ - து. எல்லாப் பாவினுள்ளும் பாவினத்துள்ளும் எல்லாத்
தளையும் புக்கு மயங்கப்பெறும் என்றார் ஆயினும், வெண்பாவினுள் வெண்சீர்
வெண்டளை ஒன்ற
 

      (பி - ம்.) 1. செப்பலோசை.