செய்யுளியல் 'மாஞ்சீர் கலியுட்'

149

 
தேன்றாட் டீங்கரும்பின்
பூந்தாட் புனற்றாமரை
வார்காற் செங்கழுநீர்.'
 
     இக்குறளடி வஞ்சிப்பாக்களுள் (2) தன்சீரும் வெண்சீரும் நேரீற்று இயற்சீரும்
வந்து 5வஞ்சித்தளையும் வெண்டளையும், ஆசிரியத்தளையும் கலித்தளையும் 6விரவி
வந்தவாறு கண்டுகொள்க.

     ['முழங்குதிரைக் கொற்கை வேந்தன்.....வேறாபவே' (கா. 27, மேற்) என்னும்
வேற்றொலி வேண்டுறையுள் வஞ்சியுரிச்சீரும் இயற்சீரும் வெண்சீரும் வந்து,
வஞ்சித்தளையும் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு மயங்கியவாறு கண்டு
கொள்க.]
 

கலி விருத்தம்

  ' (3) வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மவ்வல்
நளிர்கொடியன நறுவிரையன நகுமலரன வகுளம்
குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன 7கோங்கம்
ஒளிர்கொடியன 8வுயர்தளிரன வொழுகிணரன வோடை.'
 

(சூளா. தூது. 4.)

     இக்கலிவிருத்தத்துள் (4) நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீரும் நேரீற்று இயற்சீரும்
[வந்து வஞ்சித்தளையும், இயற்சீர் வெண்டளை யும்] மயங்கி வந்தவாறு கண்டுகொள்க.

      நேரீற்று இயற்சீர் கலிப்பாவினுள் வாராத வாறும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்
கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும் வாராதவாறும், வெண்பாவினுள்
வஞ்சியுரிச்சீர் வாராத
 

     (2) 'நிலனேந்திய விசும்பும்' என்ற தொடக்கத்து அடிகள் வஞ்சித்தளை வந்தவை;
'புன்காற் புணர்மருதின்', பூந்தாட் புனற்றாமரை' என்பன வெண்டளை வந்தவை;
'தேன்றாட் டீங்கரும்பின்', 'வார்காற் செங்கழுநீர்' என்பன ஆசிரியத்தளை வந்தவை;
'மண்டிணிந்த நிலனும்' என்பது கலித்தளை வந்தது.

      (3) மவ்வல் - காட்டு மல்லிகை. வகுளம் - மகிழ மரம். குழை மாதவி -
தளிர்களோடு கூடிய குருக்கத்திக்கொடி. இணர் - பூங்கொத்து. ஓடை - ஒரு மர
விசேடம்.

      (4) ஒவ்வோர் அடியிலும் ஈற்றிலுள்ள சீர் நேரீற்றியற்சீர்; மற்றவை
நிரைநடுவாகிய வஞ்சியுரிச்சீர்கள்.
 

     (பி - ம்.) 5. தன்றளையும். 6. மயங்கி. 7. கொகுடி. 8. வுயர்தளிரி னோடொழு,
வுயர்திரளினோடொழு.