ஒழிபியல் 'இயற்றளை வெள்ளடி'  

151

 
வஞ்சி யுள்ளும் வாரா வாயினும்
ஒரோவிடத் தாகு மென்மனார் புலவர்'
 
என்றார் பல்காயனார்.
  'நிரைநடு வியலா வஞ்சி யுரிச்சீர்
கலியினொ டகவலிற் கடிவரை யிலவே'

'வெள்ளையுட் பிறதளை விரவா வல்லன
எல்லாத் தளையு மயங்கியும் வழங்கும்'
 
என்பன யாப்பருங்கலம். (சூ. 16, 22.)

 (3)

_ _ _

அடி மயக்கம்

  39. இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்
மயக்கப் படாவல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்
கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்
முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே.
 
     இ.....கை. என்னுதலிற்றோவெனின் (1) அடிமயக்கம் ஆமாறு உணர்த்.....று.

      'இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாதம் அகவலுள்ளான் மயக்கப்படாவல்ல'
எ - து. - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடியும் வஞ்சியடியும்
ஆசிரியப்பாவினுள் மயங்கப் பெறும் எ - று. என்னை?
 
  'இயற்சீர் வெள்ளடி யாசிரிய மருங்கு
நிலைக்குரி மரபி ளிற்கவும் பெறுமே'
 
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 374.)
 
  'வஞ்சி விரவ லாசிரிய முரித்தே
வெண்பா விரவினுங் கடிவரை யிலவே'
என்றார் 1பல்காயனார்.
 

     (1) அடிமயக்கம் - ஒருபாவுக்குரிய அடி மற்றொரு பாவில் பயின்று வருவது
 

     (பி - ம்.) 1. நத்தத்தனார்.