குறள் வெண்பா |
| 'அங்கண் மதிய மரவின்வாய்ப் பட்டெனப் பொங்கிய பூசல் பெரிதுழு |
என உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க. |
ஆசிரியப்பா |
| ' (5) குருகுவேண் டாளி கோடுபுய்த் துண்டென மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது மருள்பிடி திரிதருஞ் 4சாரல் அருளா னாகுத லாயிழை கொடிதே.ழு |
இவ்வாசிரியத்துள் இரண்டாம் அடி கலியடி. இதனை. |
| 'மாவழங்கு பெருங்காட்டு மழகளிறு காணாது தீவழங்கு சுழல்விழிக்கட் சீயஞ்சென் றுழலுமேழு |
என வுச்சரித்துக் (6) கலியடி யாமாறு கண்டுகொள்க. 'வஞ்சி மருங்கின் எஞ்சா அகவல் கலிப்பாதமும் நண்ணும்ழு எ - து. வஞ்சிப்பாவினுள் ஆசிரியவடியும் கலியடியும் வந்து மயங்கப்பெறும் எ - று. 'எஞ்சாவகவல்ழு என்று சிறப்பித்தவதனால் வஞ்சியுள் ஆசிரியவடி பயின்றுவரும், கலியடியும் அருகியன்றி வாரா எனக் கொள்க. 'கலிப்பாதமும்ழு என்ற உம்மையால் வஞ்சியுள் வெள்ளடியும் அருகிவந்து மயங்கப்பெறும். 'கயற்கண் நல்லாய்ழு எ - து. மகடூஉ முன்னிலை. பட்டினப்பாலை என்னும் (7) வஞ்சிநெடும் பாட்டினுள் ஆசி |
|
(5) குருகு வேண்டு ஆளி - குருத்தை விரும்புகின்ற சிங்கம். 'குவட்டு மால்கரிக் குருகுதேர் அரிழு (கந்த. ஆற்றுப். 14.) உண்டென - களிற்றை உண்டதாக. மாவழங்கு - கொடிய விலங்குகள் திரிகின்ற. சாரவில் தலைவன் அருளாதவனாக இருத்தல் கொடிது. இது தலைவி கூற்று. (6) கலிப்பாவினுள் இது தாழிசை என்னும் உறுப்பு. (7) வஞ்சியடிகள் விரவிவந்தமையின்பட்டினப்பாலையை வஞ்சிநெடும் பாட்டு என்றும் கூறுவர். |
|
(பி - ம்.) 4. சோலை. |