ஒழிபியல் ' இயற்றளை வெள்ளடி '

155

 
ரியவடி பயின்றும் கலியடியும் வெள்ளடியும் அருகியும் வந்தனவும் உளவெனக் கொள்க.
 
'நேரிழை மகளி ருணங்குணாக் கவரும்'

(பட்டினப், 22.)

என்ற இத்தொடக்கத்தன ஆசிரியவடி.
 
'கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை'

(பட்டினப், 23.)

என்பது (8) இயற்றளை வெள்ளடி. இதனைக்,
 

குறள் வெண்பா

  ' (9) கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
யாழிசூழ் வையக் கணி'
 
என உச்சரித்து வெள்ளடியாமாறு கண்டுகொள்க.
 
  'வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர் மலைந்தும்'

(பட்டினப். 64-5.)

என்பது கலியடி இதனை.
 
  'வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மலைந்தும்
கயல்நாட்டக் கடைசியர்தங் காதலர்தோள் கலந்தனரே'
 
என வுச்சரித்துக் (10) கலியடியாமாறு கண்டுகொள்க.

      'கவியினுள்ளான் முயக்கப்படும் (11) முதற்கால் இருபாவும் முறைமையினே '
எ - து. கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் புக்கு மயங்கப்படும் எ - று.

      'முறைமையினே' என்பது - வரலாற்ற முறைமையோடுங் கூட்டி மயக்க முறைமை
செய்து வழங்கப்படும் எ - று.

      'காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்' (கலி. 38.) என்னும் மயங்கிசைக்
கொச்சகக் கலிப்பாவினுள் வெண்பாவும் ஆசிரியப்பாவும் மயங்கி வந்தவாறு கண்டு
கொள்க.
 

     (8) இயற்றளை வெள்ளடி - இயற்சீர் வெண்டளையான் வந்த வெண்பாவடி.

      (9) கனங்குழை - குழையை யணித்த பெண். வையக்கு - பூவுலகுக்கு.

      (10) கலிப்பாவினுள் இது தாழிசை என்னும் உறுப்பு.

     (11) வெண்பா, ஆசிரியம், கலி, வஞ்சி. எனக் கிடந்த வரன் முறையான் முன்பில்
இரண்டும், 'முதற்கால் இருபா' எனப்பட்டன.