156

யாப்பருங்கலக் காரிகை

 
'வெண்பா விரவினுங் கடிவரை யின்றே'
என்றார் 5நத்தத்தனார்.
 
'ஆசிரியப் பாவி னயற்பா வடிமயங்கும்
ஆசிரியம் வெண்பாக் கலிக்கண்ணாம் - ஆசிரியம்
வெண்பாக் கலிவிரவும் வஞ்சிக்கண் வெண்பாவின்
ஒண்பா வடிவிரவா வுற்று.'

(நாலடி நாற்பது.)
 

     இதனை விரித்துப் பொருளுரைத்துக் கொள்க.


(4)


     (பி - ம்.) 5. நற்றத்தனார்.

_ _ _

அடிக்கும் தொடைக்கும் புறனடை

  40. அருகிக் கலியோ டகவன் மருங்கினைஞ் சீரடியும்
வருதற் குரித்தென்பர் வான்றமிழ் நாவலர் மற்றொருசார்
கருதிற் கடையே கடையிணை பின்கடைக் கூழையுமென்
றிரணத் தொடைக்கு மொழிவ ரிடைப்புண ரென்பதுவே.
 
     இ.....கை ஒருசார் அடிக்கும் தொடைக்கும் எய்தியதோர் இலக்கண முணர்த்....று.

      'அருகிக் கலியோடு அகவல் மருங்கின் ஐஞ்சீர் அடியும் வருதற்கு உரித்தென்பர்
வான் தமிழ் நாவலர்' எ - து. ஒருசார் கலிப்பாவினுள்ளும் ஆசிரியப்பாவினுள்ளும்
ஐஞ்சீரடியும் அருகி வரப்பெறும் என்று சொல்லுவர் புலவர் எ - று.
 

வரலாறு

  ' (1) அணிகிளர் 1சிறுபொறி யவிர்துத்தி மாநாகத் தெருத்தேறித்
துணியிரும் பனிமுந்நீர்த் தொட்டுழந்து 2மலைந்தனையே.'
 
     இக்கலிப்பாவினுள் முதலடியின் ஐஞ்சீர் வந்தவாறு கண்டு கொள்க.
 

நேரிசையாசிரியப்பா

  ' (2) உமணர்ச் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
 

     (1) பொறி - புள்ளிகள். அவிர் துத்தி - விளங்குகின்ற படம். மலைந்தவன்
கண்ணன். இது தாழிசை.

      (2) உமணர் - உப்பு வாணிகர். சேர்ந்து கழிந்த - கூடிக் கடந்து சென்ற.
 

     (பி - ம்.) 1. பொறியவிர். 2. மலர்ந்தனையே.