ஒழிபியல் ' அருகிக் கலியோ '

157

 
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும 3தமியோர்க்கு மனையே'

(குறுந் 124.)
 

     இவ்வாசிரியத்துள் முதலடி ஐஞ்சீரான் வந்தவாறு கண்டு கொள்க.
 
  ['சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே'

(கா. 28. மேற்.)
 

என்னும் இணைக்குறளாசிரியப்பாவினுள் ஐஞ்சீரடியும் வந்தவாறு கண்டு கொள்க.]
 
'வெண்டளை விரவியு மாசிரியம் விரிவியும்
ஐஞ்சீ ரடியு முளவென மொழிப'
 
என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 375.)
 
 (3) வெண்பாவினுள் ஐஞ்சீரடி வரப்பெறாதெனக் கொள்க.
'ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்
வெண்பா யாப்பிற் குரிய வல்ல'
 
என்று நத்தத்தனார் அடிநூலினுள் எடுத்தோதினார்.

      'மற்றொருசார் கருதில் கடையே கடையிணை பின்கடைக் கூழையும் என்று
இரணத்தொடைக்கும் மொழிவர் இடைப்புணர் என்பதுவே' எ - து. ஒருசாராசிரியர்
முரண்தொடையைக் கடைமுரணும், கடையிணை முரணும், பின்முரணும், கடைக் கூழை
முரணும், இடைப்புணர் முரணும் என்று வேண்டுவர் எ - று.

      இரணத் தொடை எனினும் பகைத்தொடை எனினும் முரண்டொடை எனினும்
ஒக்கும். என்னை?

     ஊர் பாழ்த்தன்ன - ஊர் பாழாகப் போனது போன்ற. ஓமை - ஒரு மர விசேடம்,
இது தோழி கூற்று.
(3) வெண்பாவினுள் ஒரோவிடத்து ஐஞ்சீரடியும் வருதலுண்டு - உ - ம் :
உதிரந் துவரிய வேங்கை யுகிர்போல்
எதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறும்
துன்பங் கலந்தழியு நெஞ்சு.

(ஐந்திணை ஐம். 31.)

      இங்ஙனம் வருதல் பலர்க்கு உடன்பாடன்று.
 

     (பி - ம்) 3. தமியேற்கு.