ஒழிபியல் ' அருகிக் கலியோ '

159

 
தண்ணந் துறைவன் றவிர்ப்பவுந் தவிரான்
தேரோ காணலங் காண்டும்
பீரேர் வண்ணமுஞ் சிறுதல் பெரிதே.'
 
      இஃது அடிதோறும் கடை இரு சீரும் முரண்வரத் தொடுத்தமையாற் கடையிணை
முரண்.
 

நேரிசை யாசிரியப்பா

  ' (5) சார லோங்கிய தடந்தாட் டாழை
கொய்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து
தமிய மிருந்தன மாக நின்றுதன்
நலனுடைப் பணிமொழி நன்குபல 8புகழ்ந்து
வீங்குதொடிப் பணைத்தோ ணெகிழத்
துறந்தோ னல்லனெம் மேனியோ தீதே.'
 
     இஃது [அடிதோறும்] கடைச்சீரும் இரண்டாஞ்சீரும் மறுதலைப் படத்
தொடுத்தமையாற் பின் முரண்.

நேரிசை யாசிரியப்பா

' (6) காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடி
பூவிரி சுரிமென் கூந்தலும்
வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே.
 
     இது முதற் சீரொழிந்த மூன்று சீர்க்கண்ணும் மறுதலைப் படத் தொடுத்தமையாற்
கடைக்கூழை முரண்டொடை.

நிலைமண்டில வாசிரியப்பா

'(7) 9போதுவிரி குறிஞ்சி நெடுந்தண் மால்வரை
கோதையிற் றாழ்ந்த வோங்குவெள் ளருவி
10காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி
வேரல் விரிமலர் முகையொடு விரைஇப்
 

     (5) நல்லன் - நல்லவன். இப்பாட்டினுள் ஐந்தாமடியிலும் வீங்குதல் நெகிழ்தல்
முரணாக வந்தன.

      (6) அணங்கும் - வருத்தும். ஆல் : அசை. எமக்கே - எம்மை : வேற்றுமை
மயக்கம்.

      (7) கோதை - மாலை. அருவிக்கு மாலை உவமை. கூதாளி - ஒரு மரவி சேடம்.
வேரல் - மூங்கில். விரைஇ - விரவி. அடி 2 - 4 இடைப் புணர் முரண்.
 

     (பி - ம்.) 8. பயிற்றி. 9. போது விடு. 10 காந்தள்பசுங் குலைச் செங்கூதாளி.