ஒழிபியல் 'வருக்க நெடிலினம்'

161

 
      லெதுகை இனவெதுகை என்றும், வருக்கமோனை நெடில்மோனை இனமோனை
என்றும் பெயரிட்டு வழங்கப்படும் எ - று.
 

வரலாறு

இன்னிசை வெண்பா

' (2) நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத் தாதூதிப்
2பாடுவண் டஞ்சி யகலும் 3பருவத்துத்
தோடார் தொடிநெகிழ்த்தா ருள்ளார் 4படலொல்லா
5பாடமை சேக்கையுட் கண்'
 
இது டகர மெய் வருக்க வெதுகை.
 
'அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.'

(குறள். 37.)

இது றகர மெய் வருக்க வெதுகை.
'ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தா ரொருசாரார்'

 (கா. 27, மேற்)
 

      இது இரண்டாமெழுத் தொன்றாதாயினும் இரண்டா மெழுத்தின்மே லேறிய
நெடிலொப்புமை நோக்கி நெடிலெதுகை என்று வழங்கப்படும்.

      இனவெதுகை மூன்றுவகைப்படும், வல்லின வெதுகை மெல்லின வெதுகை
இடையினவெதுகை என.
 

வரலாறு

  'தக்கார் தகவில ரென்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்'

(குறள். 114.)

இது வல்லின வெதுகை.
 
  'அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
நண்பென்னு நாடாச் சிறப்பு.'

(குறள். 74.)
 

 

இது மெல்லின வெதுகை.
 

     (2) இணர் - பூங்கொத்து. தொடி நெகிழ்த்தார் - வளையல் கழலும்படி மெலியச்
செய்த தலைவர். உள்ளார் - நம்மை நினையார். பாடு அமை சேக்கை - பெருமை
பொருந்திய பாயல். சேக்கையுள்கண் படல் ஒல்லா.
 

     (பி - ம்.) 2. பாடும் வண். 3. பருவத்தும். 4. படலொல்லாப், படரொல்லார்.
5.பாடாமைச்.