| 'அகர முதல..........யுலகு' |
(கா. 25, மேற்.) |
என்பதும், |
| 'வடியேர்கண் ணீர் மல்க' |
(கா. 18, மேற்.) |
என்பதும் (5) ஓரெழுத்து ஒன்றி வந்தமையால் இடையாகெதுகை. |
| 'தக்கார் தகவிலர்' |
(பக். 161) |
என்பது (6) கடையா கெதுகை. |
| 'பற்றுக பற்றற்றான் பற்றினை யாப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' |
(குறள், 350) |
இது சீர்முழுதும் ஒன்றி வந்தமையால் தலையாகு மோனை. |
| 'மாவும் புள்ளும் வதிவயிற் படர' |
(கா. 18, மேற்.) |
என்பது (7) இடையாகு மோனை. |
| 'பகலேபல் பூங்கானக் கிள்ளை யோப்பியும்' |
என்பது (8) கடையாகு மோனை. 'உயிராசிடை யிட்டிருக்கும் ஒருசார் இரண்டடி மூன்றாம் எழுத்தும் ஒன்றி நிரக்கும் எதுகை என்றாலும் சிறப்பில' எ - து. உயிரெதுகை ஆசெதுகை இடையிட் டெதுகை [என்னும் எதுகையும்], இரண்டடி யெதுகை மூன்றாமெழுத் தொன்றெதுகை என்று இத்தொடக்கத்து ஒருசா ரெதுகையும் உள; ஆகிலும் அவை பெரியதோர் சிறப்பில எனக் கொள்க. |
வரலாறு |
ஆசிரியப்பா |
| 'துளியொடு மயங்கிய தூங்கிரு ணடுநாள் அணிகிளர் தாரோ யருஞ்சுர நீந்தி |
|
(5) ஓர் எழுத்து என்றது இரண்டாம் எழுத்தினை. (6) ஓரெழுத்தும் ஒன்றாது வருக்கம் நெடில் இனம் பற்றி வருவது கடையாகெதுகை எனக் கொள்க. (7) முதலெழுத்து ஒன்றே ஒன்றி வருவதுஇடையாகுமோனை. (8) வருக்க முதலிய மோனைகள் கடையாகு மோனை. |