ஒழிபியல் 'வருக்க நெடிலினம்'

165

 
  17வடியமை யெஃகம் வலவயி னேந்தித்
தனியே வருதி 18 நீயெனின்
மையிருங் கூந்த லுய்தலோ வரிதே.'
     இஃது இரண்டாமெழுத் தொன்றாதாயினும் இரண்டாமெழுத் தின்மேலேறிய உயிர்
ஒன்றி வந்தமையால் உயிரெதுகை. இது கையனார் காட்டிய பாட்டு.

     இனி ஆசெதுகைக்குச் சொல்லுமாறு :
 
'யரலழ வென்னு மீரிரண் டொற்றும்
வரன்முறை பிறழாது வந்திடை 19 யுயிர்ப்பினஃ
தாசிடை யெதுகையென் 20 றறையல் வேண்டும்'
 
என்றார்21 ஆகலின்.
 

வரலாறு

காப்பியக் கலித்துறை

(9) 'காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையாற் றிசைபோய துண்டே' (சீவக. 31)
இது யகரவொற்று இடைவந்த (10) ஆசெதுகை.
 

கலிவிருத்தம்

  (11) 'மாக்கொடி 22மாணையு மவ்வற் பந்தருங்
கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்
பூங்கொடிப் பொதும்பரும் 23பொன்ன ஞாழலுந்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொத்ததே.'

(சூளா. நாட்டு. 29)

     இது ரகர வொற்று இடைவந்த ஆசெதுகை.
 

     (9) காய் மாண்ட - காய் மாட்சியமைப்பட்ட. நெற்றி - உச்சி. தொடை -
தேனிறால். வருக்கை - பலாப்பழம்.

      (10) ஆசிடையிட்ட இருகுற ணேரிசை வெண்பாவிற் கூறப்படும் ஆசு வேறு;
இங்கே கூறப்படும் ஆசு வேறு. அது பற்றாசு போன்ற ஒன்றும் இரண்டுமாகிய
அசைகள். இது ய ர ல வ ழ ஒற்றுக்கள்.

      (11) மாணை - ஒருவகைப் பூங்கொடி.
 

     (பி - ம்.) 17. வடிவமை. 18. நீயென. 19. யுயிர்ப்பி னாசிடை. 20. றறியல்
வேண்டும், றறிந்தனர் கொளலே. 21. கையனார். 22. யானையு. மாலையு. 23. புன்னை,
கானன்.