ஒழிபியல் 'வருக்க நெடிலினம்'

167

 
யால் இடையிட்டெதுகை. இது 28 தொல்காப்பியனார் காட்டிய பாட்டு.
 
'தாஅ வண்ணம்.
இடையிட்டு வந்த வெதுகைத் தாகும்'

(தொல். பொருள், 527.)

என்றார் ஆகலின்.
 
      இனி இரண்டடி எதுகை வருமாறு :
 

இன்னிசை வெண்பா

'(13) துவைக்குந் துளிமுன்னீர்க் கொற்கை மகளிர்
அவைப்பதம் 29பல்லுக் கழகொவ்வா முத்தம்
மணங்கமழ்தா ரச்சுதன் மண்காக்கும் வேலின்
30அணங்கமுத மந்நலார் பாட்டு.
 
     இது முதலிரண்டடியும் ஓரெதுகையாய்ப் பின்பிரண்டடியும் மற்றோர் எதுகையாய்
வந்தமையால் இரண்டடி யெதுகை.
 
  'இரண்டடி யெதுகை திரண்டொருங் கியன்றபின்
முரண்ட வெதுகையு 31 மிரண்டினுள் வரையார்'
என்றார் ஆகலின்.
 
     மோனைக்கும் இவ்வாறே ஒட்டிக்கொள்க. 'ஒன்றின முடித்த றன்னின 32முடித்தல்'
என்பது தந்திர வுத்தி ஆகலின்.
 

வரலாறு

கலிவிருத்தம்

  '(14) ஆகங் கண்டகத் தாலற்ற வாடவர்
ஆகங் கண்டகத் தாலற்ற வன்பினர்
 

     (13) அச்சுதல் - அச்சுதநந்தி ; இவனைப்பற்றி யா. வி. உரையின் சில பாடல்கள்
வந்துள்ளன. 'அணங்கு மமுதமு மந்நலார் பாடல்' என்ற பாடத்தைக் கொண்டால் இது
கலிவிருத்தம்.

      (14) ஆகம் கண்டகத்தால் அற்ற ஆடவர் - தம் உடல்கள் கத்தியால் அற்று
விழுந்த வீரர்களின். ஆகம்கண்டு - உடலைக் கண்டு. அற்ற அன்பினர் - தம்
 

     (பி - ம்.) 28. கையனார். 29. பல்லினழ. 30. அணங்குமமுதமு.... பாடல்,
31. மிரண்டல. 32. முடித்தலென், றின்ன வகையான் யாவையு முடியும் என்றார்
ஆகலின்.