| பாகங் கொண்டு பயோதரஞ் சேர்த்தினார் பாகங் கொண்டு பயோதர நண்ணினார்.' |
இது முதலிரண்டடியும் ஒரு மோனையாய்ப் பின்னிரண்டடியும் மற்றொரு மோனையாய் வந்தமையால் இரண்டடி மோனை எனக் கொள்க. இனி மூன்றாமெழுத் தொன்றெதுகை வருமாறு : |
| 'பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின்.' |
(குறள், 292.) |
| 'பவழமும் பொன்னுங் குவைஇய முந்தின் திகழரும் பீன்றன புன்னை.' |
இவை மூன்றாமெழழுத்தொன் றெதுகை. |
'நிரக்கு மெதுகை' என்று சிறப்பித்தவதனால் விட்டிசை வல்லொற்றெதுகை என்றும், விட்டிசை மோனை என்றும் வேண்டுவாரும் உளரெனக் கொள்க. |
வரலாறு |
குறள் வெண்பா |
| 'பற்றிப் பலகாலும் பான்மறி யுண்ணாமை நொஅலைய னின்னாட்டை நீ.' |
இது வல்லொற்று அடுத்தாற்போல விட்டிசைத்த 33குற் றெழுத்தோடு புணர்த்தமையால் விட்டிசை வல்லொற் றெதுகை. ['அ அவனும் இ இவனும் உ உவனுங் கூடியக்கால் எ எவனை வெல்லா ரிகல்.' இது முதலெழுத்து விட்டிசைத்து வந்தமையால் விட்டிசை மோனை.] இவை எல்லாஞ் சிறப்பிலவெனக் கொள்க. |
|
உயிர்மேல் அன்பற்ற மனைவிமார். பாகம் கொண் - தம் கணவரின் உடலைத் தழுவி. பயோதரம் - முலை. பயோதரம் நண்ணினார் - மேக மண்டலத்தை அடைந்தனர்; இறந்தார் என்றபடி. இது தலையொடு முடிதல் என்னும் துறை. |
|
(பி - ம்.) 33. குற்றெழுத்துக் குற்றெழுத்தினோடு வந்தமையால். |