| உறுப்பியல் 'குறினெடிலாவி' | 17 | | | | | 'தனிநிலை முதனிலை யிடைநிலை யீறென நால்வகைப் படூஉமள பாய்வரு மிடனே' | என்றார் ஆகலின். | | வரலாறு | ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ எனத் தனிநிலை யளபெடை வந்தவாறு. | ஆஅலமரம், ஈஇரிலை, ஊஉரிடம், ஏஎரிகள், ஐஇயவி, ஓஒரிகள், ஒளஉவியம் என முதனிலை யளபெடை வந்தவாறு. | படாஅகை, பரீஇகம், கழூஉமணி, பரேஎரம், வளைஇயம், புரோஓசை, அநௌஉகம் என இடைநிலை அளபெடை வந்தவாறு. | கடாஅ, குரீஇ, கழூஉ, மிலேஎ, கடைஇ, அரோஒ, அரௌஉ என இறுதிநிலை யளபெடை வந்தவாறு. | உயிரளபெடை எழுத்து நோக்க ஏழாம், இடம்நோக்க நான்காம், எழுத்தும் இடமும் உறழ்ந்து நோக்க (19) இருபத்தெட்டாம் எனக் கொள்க. | இனி ஒற்றளபெடைக்குச் சொல்லுமாறு: | ஒற்றுக்களுள், ங ஞ ண ந ம ன வ ய ல ள வாய்தம் என்னும் பதினோரொற்றும் குறிற்கீழும் குறிலிணைக் கீழும் வந்து அளபெடுக் கும் எனக் கொள்க. என்னை? | | | 'ஙஞண நமன வயலள வாய்தம் எனுமிவை யீரிடத் தளபெழு மொரோவழி' 'வன்மையொடு ரஃகான் ழஃகா னொழித்தாங் கன்மெய் யாய்தமோ டளபெழு மொரோவழி' | என்றார் ஆகலின். | | வரலாறு | மங்ங்கலம், பஞ்ஞ்சு, மண்ண்ணு, பந்ந்து, அம்ம்பு, மின்ன்னு, தெவ்வ்வர், வெய்ய்யர், செல்ல்க, கொள்ள்க, எஃஃகு என இவை குறிற்கீழ்ப் பதினோ ரொற்றும் அளபெழுந்தவாறு. அரங்ங்கம், முரஞ்ஞ்சு, மருண்ண்டு, பருந்ந்து, அரும்ம்பு, |
| (19) நன்னூலார் உயிரளபெடை இருபத்தொன்று என்பர் ; சூ. 61. கா. | |
|
|