170

யாப்பருங்கலக் காரிகை

 
      அவற்றுள் சில வருமாறு:
  'ஈத்துவக்கு மின்ப மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.'

(குறள். 228)
 

'அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்ள்
சிறுகை யளாவிய கூழ்.'

(குறள், 64.)
 

     இவை இனவெழுத்துப் பெற்று மோனை முதலாகிய தொடையும் தொடை
விகற்பமும் போலாமை வேறுபடத் தொடுத்தமையால் மருட் செந்தொடை.

     இனி வழியெதுகைக்குச் சொல்லுமாறு :
 

கட்டளைக் கலித்துறை

'(16) மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன் றொண்டியின்வாய்க்
கண்டிலந் தண்டுறைக் கண்டதொன் றுண்டு 35கனமகர
குண்டலங் கெண்டை யிரண்டொடு தொண்டையுங் கொண்டொர்திங்கள்
மண்டலம் வண்டலம் பக்கொண்ட றாழ வருகின்றதே'
 
     எனவும், 'கொங்கு தங்கு கோதை யோதி' (கா. 13, மேற்.) எனவும் கொள்க.
அனுப்பிராச மென்னும் வடமொழியை வழி யெதுகை என்பது தமிழ் வழக்கெனக்
கொள்க.

      இனி வழிமுரண் வருமாறு : வழிமுரணி வருவன வழிமுரண் என்று
வழங்கப்படும்.
 

விருத்தம்

  'செய்யவாய்ப் பசும்பொன் னோலைச் சீறடிப் பரவை யல்குல்
ஐயநுண் மருங்கு னோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்'

(சூளா. சீய. 101.)

எனவும்.
 

     (16) தொண்டி - சோழ நாட்டுத் துறைமுகத்து ளொன்று. கண்டல் - தாழை.
கெண்டை என்றது கண்களை. தொண்டை - ஆதொண்டைக் கனி; இது வாய்க்கு
உவமை. வண்டு அலம்ப ; அலம்ப - ஒலிப்ப. கொண்டல் என்றது கூந்தலை.
 

     (பி - ம்.) 35. கனவயிரக்