'சுருங்கிற்று மூன்றடி யேனைத் தரவு' என்றாராயினும், கலிப்பாவுக்கு நான்கடியே சிறுமை என்று 'வெள்ளைக் கிரண்டடி' என்னும் காரிகையிற் (கா. 14) சொன்னமையால் தரவு கொச்சகக் கலிப்பாவுக்கு நான்கடியே சிறுமை எ - று.
'தாழிசைப்பாச் சுருங்கிற் றிரண்டடி 3 ஓக்கம் இரட்டி' எ - து. பொதுவகையாற் றாழிசை சொல்லிப் போந்தாராயினும். தாழிசைக்கு இரண்டடிச் சிறுமை, பெருமை நான்கடி, இடை மூன்றடியாய் வருவதெனக் கொள்க. |
'சுருங்கும் தரவினில் தாழிசையே' எ - து. தரவடியிற் றாழிசையடி சுருங்கி வரும் எ-று.
இவற்றுக்கு இலக்கியம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற் றுள்ளுங் கண்டுகொள்க.
4 சுரும்பு இமிரும் தரங்கக் குழலாய்' எ - து, மகடூஉ முன்னிலை. |
(7) |
|
(பி - ம்.) 3. யோங்கலிரட்டி. 4. சுரும்பிவரும், சுரும்பிருந்த. |
பாக்களுக்குரிய சில இயல்புகள் |
| 43. பொருளோ டடிமுத னிற்பது 1கூனது வேபொருந்தி இருள்சேர் 2விலாவஞ்சி யீற்றினு நிற்கு மினியொழிந்த மருடீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசைவனப்புப் பொருள்கோள் குறிப்பிசை யொப்புங் குறிக்கொள் பொலங் கொடியே |
இ - கை மேற் சொல்லப்பட்ட பாக்கட்கு எல்லாம் எய்தியதோர் இலக்கணம் உணர்த்..று. |
கூன் |
'பொருளோடு அடிமுதல் நிற்பது கூன்' எ - து. அடி முதற்கண் பாவினது பொருளைத் தழுவித் தனியே நிற்பது கூன் எனப்படும் எ - று. 'அதுவே பொருந்தி இருள் 3சேர்விலா வஞ்சி ஈற்றினும் நிற்கும்' எ - து அக்கூன் வஞ்சிப்பாவின் ஈற்றினும் நிற்கும் எ - று. |
|
(பி - ம்.) 1. கூனடுவே. 2. பிலாவஞ்சி. 3. சேர்பிலா. |