174

யாப்பருங்கலக் காரிகை

 

நேரிசை யாசிரியப்பா

  '(1) அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே.
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப்
பாடமை சேக்கையுட் படர்கூர்ந் திசினே
அன்ன ளளிய ளென்னாது மாமழை
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே.'
 

(குறுந். 216.)

     இவ்வாசிரியத்துள் அடி முதற்கண் 'அவரே' எனவும் இடைக்கண், யானே' எனவும்
சீர் கூனாய் வந்தவாறு கண்டு கொள்க.
 

கொச்சகக் கலிப்பா

(2) 'உலகினுட்,
பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்
இருந்தகைய விறுவரைமே லெரிபோலச் சுடர்விடுமே
சிறுதகையார் சிறுதகைமை சிறப்பெனினும் பிறழ்வின்றி
உறுதகைமை யுலகிற்கோ ரொப்பாகித் தோன்றாவே.'
 
     இக்கலிப்பாவினுள் அடிமுதற்கண் 'உலகினுள்' எனச் சீர் கூனாய் வந்தவாறு
கண்டுகொள்க.
 
  'உலகே,

முற்கொடுத்தார் பிற்கொளவும்
பிற்கொடுத்தார் முற்கொளவும்
உறுதிவழி யொழுகுமென்ப
அதனால்
நற்றிற நாடுத னன்மை
பற்றற யாவையும் பரிவறத் துறந்தே'

     (1) தருமார் - கொணரும்பொருட்டு. வள்ளி - வள்ளிக்கொடி. இறந்தோர் - கடந்து
சென்றவர். தோடு ஆர் எல்வளை - தொகுதி பொருந்திய விளக்கத்தை யுடைய
வளையல்கள். பாடு அமை -படுத்தல் அமைந்த. சேக்கை - படுக்கை. படர்கூர்ந்திசின் -
துன்பம் மிக்கேன்

      (2) இறு வரை - பெரிய மலை. ஒப்பு ஆகி - உலகம் ஏற்றுக் கொள்வதாகி.