176

யாப்பருங்கலக் காரிகை

 
  'தண்டையி னினக்கிளி கடிவோள்
பண்டைய ளல்லண் மானோக் கினளே.'
 
     இதனுள் (3) தட்டையெனற்பாலதனைந் தண்டையென்று மெலிக்கும் வழி
மெலித்தவாறு.
 

இன்னிசை வெண்பா

'(4) வெண்மண லெக்கர் விரிதிரை தந்தநீர்
கண்ணாடி மண்டிலத் தூதாவி யொத்திழியுந்
தண்ணந் துறைவர் தகவிலரே தற்சேர்ந்தார்
வண்ணங் கடைப்பிடியா தார்.'
     இதனுள் 'தண்டுறைவர்' எனற்பாலதனைத் 'தண்ணந்துறைவர்' என்று விரிக்கும்
வழி விரித்தவாறு.
 

நேரிசை வெண்பா

  'பூத்தாட் புறவின் 9புனைமதில் கைவிடார்
காத்தலிற் காமுறுவ 10ரேனையர் - பார்த்துறார்
வேண்டார் வணங்கி விறன்மதி றான்கோடல்
வேண்டுமாம் வேண்டார் மகன்.'
 
     இதனுள் 'வேண்டாதாரை வணக்கி' எனற்பாலதனை 'வேண்டார் வணக்கி' என்று
தொகுக்கும் வழித் தொகுத்தவாறு.
 

நேரிசை வெண்பா

  ' (5) பாசிழை யாகம் பசப்பித்தான் 11பைந்தொடீஇ
மாசேன னென்று மனங்கொளீஇ - மாசேனன்
சேயிதழ்க் கண்ணி தருதலாற் சேர்த்தியென்
நோய்தீர நெஞ்சின்மேல் வைத்து.'
 
     இதனுன் 'பச்சிழை' எனற்பாலதனைப் 'பாசிழை' என்று நீட்டும் வழி நீட்டியவாறு.
 

     (3) தட்டை - கிளி கடி கருவி.

      (4) கண்ணாடியில் ஊதும் ஆவி : 'தெள்ளற வியற்றிய நிழல் காண் மண்டிலத்,
துள்ளூதாவியிற் பைப்பய நுணுகி' (அகநா. 71: 13-4.)

      (5) பாசிழை என்பது பண்பின் விகாரமே ஒழியச் செய்யுள் விகாரம் அன்றென்பர்
பலர்.
 

     (பி - ம்.) 9. புனைமலர் கைவிட்டார், காத்தவிக் காதல ரேனையர்;புனைமதில்
கைவிட்டார். 10. ரேழையார், 11. பைந்தொடி.