வரலாறு |
| | 'அறிவினா லாகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை' |
(குறள், 315.) |
எனக் கொள்க. |
(17) அழகென்பது - செய்யுட் சொல்லாகிய திரி சொற்களால் ஓசை இனியவையாகப் புணர்க்கப்படுவது. என்னை? |
| | 'செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே யழகெனப் படுமே' |
என்றார் ஆகலின். |
| வரலாறு |
| நேரிசை யாசிரியப்பா |
| | '(18) துணியிரும் பௌவங் குறைய வாங்கி அணிகிள ரடுக்கன் முற்றிய வெழிலி காலொடு மயங்கிய கனையிரு ணடுநாள் யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப நெடுவரை மருங்கிற் 22 பாம்புற விழிதருங் கடுவரற் கலுழி நீந்தி வல்லியம் வழங்குங் கல்லதர் நெறியே' |
எனக் கொள்க. (19) தொன்மை யென்பது பழமைத்தாய் நிகழ்ந்த பெற்றி யுரைக்கப்படும் அவற்றின் மேற்று. என்னை? |
| | 'சுரிகுழன் மடவாய் தொன்மை தானே யுரையொடு புணர்ந்த பழமை மேற்றே' |
என்றார் ஆகலின். |
|
(17) அழகென்பது எட்டுத்தொகை நூல்கள் போன்றது. (18) பௌவம் - கடல். எழிலி - மேகம். கலுழி - காட்டாறு. காட்டாற்றுக்குப் பாம்பு உவமை. வல்லியம் - புலி. கல் அதர் - மலைவழி. வெற்ப நெறி யாங்கு வந்தனையோ. (19) தொன்மை என்பது செய்யுளும் வசனமும் தழுவி வந்த கதை முதலியன. தகடூர் யாத்திரை, சிலப்பதிகாரம் முதலியன உதாரணமாம். |
|
(பி - ம்.) 22. பாம்பு பட விழி தருங். |