ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

187

 
பிடிபிணை மஞ்ஞை நடைநோக்குச் சாயல்
வடிவினளே வஞ்சி மகள்'
 
எனக் கொள்க.

      இனி, வினை நிரனிறை வருமாறு :
 

நேரிசை வெண்பா

(30) 'காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப
பொதுசேர் தார்மார்ப போர்ச்செழிய - நீதியால்
மண்ணமிர்த மங்கையர்தோள் மாற்றாரை யேற்றார்க்கு
நுண்ணிய வாய பொருள்.'
 
எனவும்,

இன்னிசை வெண்பா

  (31) ' அடல்வே லமர்நோக்கி நின்முகங் கண்டே
உடலு மிரிந்தோடு 33மூழ்மலரும் பார்க்கும்
கடலுங் கனையிருளு மாம்பலும் பாம்புந்
தடமதிய மாமென்று தான்.'
 
எனவும் கொள்க.

      [இனி, முறை நிரனிறை, எதிர் நிரனிறை, மயக்க நிரனிறை என்று வேண்டுவாரு
முளரெனக் கொள்க. அவை (32) வந்த வழிக் கண்டு கொள்க.]
 

     (30) கா - காப்பாற்று. து - உண். தாழ் - தாழ்த்து. ஆய் - ஆராய்ச்சி செய்.
காது சேர் தாழ் குழை ஆய் என்ற வினைகளை நிரலே மண் முதலியவற்றோடு கூட்டி
'மண்கா, அமிர்தம் து, தோள்சேர் மாற்றாரைத் தாழ், ஏற்றார்க்குக் குழை, பொருள்
ஆய் என்று முடிக்க.

      (31) நோக்கி : விளி. உடலும் - பொங்கிவரும். ஊழ் - முறை. 'கடல் உடலும்,
இருள் இரிந்தோடும். ஆம்பல் மலரும், பாம்பு பார்க்கும்' எனக்கூட்டுக.

      (32) நன். சூ. 414, சங்கர. முதலியவற்றிற் காண்க. நிரனிறைப் பொருள் கோளை
ஓர் அணியாகக் கொள்வர் தண்டியலங்கார ஆசிரியரும் மாறனலங்கார ஆசிரியரும்.
 

     (பி - ம்.) 33. முண்மலரும்.