இனி, பூட்டுவிற் பொருள்கோள் வருமாறு : |
நேரிசை வெண்பா |
| 'திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாதர் இறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு.' |
இதனுள் 'திறந்திடுமின்' என்பது கதவென்பதனோடு 34நோக்குடைமையிற் (34) பூட்டுவிற் பொருள்கோளாயிற்று. இனி புனல் யாற்றுப் பொருள்கோள் வருமாறு : |
இன்னிசை வெண்பா |
| 'அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைவதூஉங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம்.' |
(நான்மணிக். 28) |
இஃது அடிதோறும் பொருளற்று வந்தமையாற் (35) புனல் யாற்றுப் பொருள்கோள்.
இனி, அளைமறி பாப்புப் பொருள்கோள் வருமாறு : |
ஆசிரிய விருத்தம் |
| '(36) தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார் தாமுஞ் சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற் சுழல்வார் தாமும் மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்று 35முனிவார் தாமும் |
|
(34) பூட்டுவிற் பொருள்கோளை ஓர் அணியாகக் கொள்வர் மாறனலங்கார முடையார் (35) யாற்று நீர்ப் பொருள்கோள், யாற்று வரவுப் பொருள்கோள், ஆற்றொழுக்குப் பொருள்கோள் எனவும் இது கூறப்படும். (36) நாற்கதி : தேவகதி, மக்கட்கதி, விலங்குகதி, நரககதி, மூழ்ந்த - பற்றிக்கொண்ட. அளை - புற்று. |
|
(பி - ம்.) 34. பொருள்கொண்டமையாற். 35. முயல்வார். |