உறுப்பியல் 'குறிலே நெடிலே'

19

 

'ஒற்றிற்கு மாத்திரை யொன்றே யளபெழுந்தாற்
றெற்றக் குறியதுவே யாம்'
'(24) உன்னல் காலே யூன்ற லரையே
முறுக்கன் முக்கால் விடுத்த லொன்றே'
 
என்றார் ஆகலின்.
 

(4)

---

அசை

  5. குறிலே நெடிலே குறிலிணை யேனைக் குறினெடிலே
நெறியே வரினு நிரைந்தொற் றடுப்பினு நேர்நிரையென்
றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே.
 
     இ - கை. (1) நிரனிறைப் பொருள்கோள் வகையான் (2) நேரசையும் நிரையசையும்
ஆமாறும் அவற்றுக்கு உதாரணம் ஆமாறும் உணர்த்....று.
 
     'குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறினெடிலே நெறியே வரினும் நிரைந்து
ஒற்று அடுப்பினும் நேர்நிரை என்று அறி' எ - து. குற்றெழுத்துத் தனியே வரினும்,
நெட்டெழுத்துத் தனியே வரினும், குற்றெழுத்து ஒற்றடுத்து வரினும், நெட்டெழுத்து
ஒற்றடுத்து வரினும், நேரசையாம் எ-று.
 
     குறில் இணைந்து வரினும், குறினெடில் இணைந்து வரினும், குறில் இணைந்து
ஒற்றடுத்து வரினும், குறினெடில் இணைந்து ஒற்றடுத்து வரினும் நிரையசையாம் எ-று.
 

     (24) இதன்பின் சில சுவடிகளில் 'அரைநொடி யென்ப தியாதென வினவின்,
நொடிதரக் கூடிய விருவிர லளவே' என்ற சூத்திரம் காணப்படுகிறது.

     (1) நிரனிறைப் பொருள்கோள் - பெயரும் வினையுமாகிய சொற்களையும் அவை
கொள்ளும் பெயரும் வினையுமாகிய பயனிலைகளையும் வேறு வேறு நிரையாக
(வரிசையாக) நிறுத்தி முறையானே இதற்கு இது பயனிலை என்பது தோன்றக்
கூறுவதாம்; நன். சூ. 414.

     (2) செய்யுளுக்கு எழுத்தெண்ணுங்கால் மெய்கள் தள்ளுண்டுபோம். அங்ஙனம்
கணக்கிட்டு நேரசையைத் தனியசை என்றும் நிரையசையை இணையசை என்றும்
காக்கை பாடினியார் முதலியோர் வழங்குவர். இந்நூலாசிரியரும் யாப்பருங்கலத்தில்
இப்பெயர்களை ஆளுவர் ; யா. வி. சூ. 7, 9.