| வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே.' |
இதனுள் 'வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறி முன்னி முயலாதார்' என்னும் இறுதிச் சொல், இடையும் முதலும் சென்று பொருள் கொண்டமையால் 'அளைமறி பாப்புப் பொருள் கோள்.' |
(8) தாப்பிசைப் பொருள்கோள் |
இனி, தாப்பிசைப் பொருள்கோள் வருமாறு : |
| 'உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு.' |
(குறள், 255) |
'இதனுள் ஊன் உண்ணாமை யுள்ளது உயிர்நிலை' எனவும் 'ஊன் உண்ண அண்ணாத்தல் செய்யா தளறு' எனவும் நடுநின்ற 'ஊன்' என்னும் சொல் முன்னும் பின்னும் பொருள் கொண்டமையால் (37) தாப்பிசைப் பொருள்கோளாயிற்று. |
(9) கொண்டு கூட்டுப் பொருள்கோள் |
இனிக் கொண்டு கூட்டுப் பொருள்கோள் வருமாறு : |
இன்னிசை வெண்பா |
| 'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை தணிவாமே வங்கத்துச் சென்றார் வரின்.' |
இதனுள், 'தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட வெண் கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனிப் பசலை' எனவும், 'அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்' எனவுஞ் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் (38) கொண்டு கூட்டுப் பொருள்கோளாயிற்று. |
|
(37) தாப்பிசைப் பொருள் கோள் - கயிற்றினாற் கட்டப்பட்ட ஊசல் போன்ற பொருள் கோள். அணியிலக்கண வகையுள் இது இடைநிலைத் தீவகத்தின்பாற் படும். (38) ஓரடியுள் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது சுண்ண மொழி மாற்று; ஈரடிகளில் மொழிகளை மாற்றிப் பொருள்கொள்வது; அடிமொழிமாற்று; |