நேரிசை வெண்பா |
| ['ஆரிய மன்னர் பறையி னெழுந்தியம்பும் பாரி பறம்பின்மேற் றண்ணுமை - காரி விறன்முள்ளூர் வேங்கைவீ தானாணுந் தோளாள் நிறனுள்ளூ ருள்ளு தலர்.' |
இதனுள் 'தண்ணுமை நாணும் தோளாள்' என்றும், 'நிறம் வேங்கை வீ' என்றும், 'அலர் ஆரிய மன்னர் பறையின் எழுந் தியம்பும் முள்ளூர்' என்றும் சொற்களைக் கொண்டு கூட்டிப் பொருள் கொண்டமையால் இதுவும் கொண்டு கூட்டுப் பொருள் கோள் ஆயிற்று.] |
(8) குறிப்பிசை |
இனி, குறிப்பிசை என்பது எழுத்திலோசையான் வந்த (39) முற்கும் வீளையும் இலதையும் அனுகரணமும் முதலாக உடையன செய்யுளகத்து வந்தால் அவற்றையும் செய்யுள் நடை அழியாமல் அசையும் சீரும் அடியும் தொடையும் பிழையாமல் கொண்டு அலகிட்டு வழங்கப்படும் எ - று. |
வரலாறு |
நேரிசை வெண்பா |
| ' (40) மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ கென்று திரியு மிடைமகனே - சென்று மறியாட்டை யுண்ணாமல் வன்கையால் வல்லே அறியாயோ வண்ணாக்கு மாறு' |
எனக் கொள்க.
ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய (41) ஊசிமுறி யுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க. என்னை?
பலவடிகளில் மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டு என்று இவை தம்முள் வேறுபாடு உணர்க. |
|
(39) முற்கு - முக்குதலின் ஒலி. வீளை - சீழ்க்கையடித்தலின் ஓசை இலதை, அனுகரணம் - ஒலிக்குறிப்பு ; ஒப்பாகத் தோன்றுவது என்பது பொருள்.
(40) மறி - ஆட்டுக்குட்டி, அண்ணாக்கும் ஆறு - தலையை நிமிர்க்கும் விதத்தை. 'ஆட்டை மறி யுண்ணாமல்' என்று கூட்டுக.
(41) இத்தொடர் எல்லாச் சுவடிகளிலும் 'ஆசிரிய முறி' என்றே காணப்படுகிறது. |