| 'எழுத்த லிசையன அசையொடு சீர்க்கண் நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே' |
என்றார் ஆகலின். |
(9) ஒப்பு |
இனி, 'ஒப்பும்' என்பது மேற் சீரும், தளையும், அடியும், வரை யறுக்கப்பட்ட பாவும், பாவினமும் சொன்ன பெற்றியிற் றிரிந்து மிக்குங் குறைந்தும் வந்தாலும் அவற்றை ஒரு புடை ஒப்புமை நோக்கி 36அவ்வச் செய்யுட்களின் பாற்படுத்தி அப்பெயரானே வழங்கப்படும் எ - று. |
வரலாறு |
| '(42) கோழியுங் கூவின குக்கில் குரல்காட்டுந் தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினோ ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக் கூழை நனையக் குடைந்து குரைபுனல் ஊழியு 37மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.' |
மேல் நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம் என்று வரையறத்துச் சொன்னார் (கா. 33); இஃது ஐந்தடியான் வந்த தாயினும் ஒருபுடை ஒப்புமை நோக்கிக் கலிவிருத்தத்தின் பாற்படுத்தி வழங்கப்படும். இதனைத் தரவு கொச்சகம் எனினும் இழுக்காது. இஃது அவினயனார் காட்டியது. |
| 'சுற்றுநீர் சூழ்கிடங்கிற் பொற்றாமரைப் பூம்படப்பைத் தெண்ணீர் நல்வய லூரன் கேண்மை அல்லிருங் கூந்தற் கலரா னாதே.' |
மேல் வஞ்சிப்பாவுக்கு மூன்றடிச் சிறுமை என்று வரையறுத்துச் சொன்னார் (கா. 14); இஃது இரண்டடியான் வந்ததாயினும் ஒரு புடை ஒப்புமை நோக்கி வஞ்சிப்பாவின் பாற்படுத்து வழங்கப்படும் எ - று. வஞ்சிப்பா இரண்டடியானும் |
|
(42) குக்கில் - செம்போத்து என்னும் பறவை. தாழியுள் நீலம் - சட்டியில் வளர்க்கும் குவளை. அறிவன் - அருகபரன். கூழை - கூந்தல். |
|
(பி - ம்.) 36. ஒழிந்த செய்யுட்களின் பாற்படுத்தி வழங்கப். 37. மாடுவா. |