196

யாப்பருங்கலக் காரிகை

 

புனைந்துரை   

     இனி, புனைந்துரை இரண்டு வகைப்படும், பெரியதனைச் சுருக் கிச் சொல்லுதலும்,
சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் என என்னை?
 
  `உரைக்கப் படும்பொருட் கொத்தவை யெல்லாம்
புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை 39யாகும்ழு
என்றார் ஆகலின்.
 

வரலாறு

நேரிசை வெண்பா

  `அடையார்ப்பூங் கோதையாட் கல்குலுந் தோன்றும்
புடையார் வனமுலையுந் தோன்றும் - இடையாதும்
40கண்கொள்ளா வாயினுங் காரிகை நீர்மையாட்
குண்டாக வேண்டு நுசுப்பு.ழு
இது (43) பெரியதனைச் சுருக்கிற்று.
 

நேரிசை வெண்பா

  (44) `அவாப்போ 41லகன்றத னல்குன்மேற் சான்றோர்
உசாப்போல வுண்டே மருங்குல் - உசாவினைப்
பேதைக் குரைப்பான் பிழைப்பிற் பெருகினவே
கோதைக்கொம் பன்னாள் குயம்.ழு
 
     இது சிறியதனைப் பெருக்கிற்றும் பெரியதனைச் சுருக்கிற்றும். இதனுள் `சான்றோர்
உசாப்போல வுண்டே மருங்குல்ழு என்பது பெரியதனைச் சுருக்கிற்று. அல்லன
சிறியதனைப் பெருக்கின.
 

     (43) உளதாகிய இடையை, `கண் கொள்ளாழு என்றமையால் பெரியதனைச்
சுருக்கிற்று.

      (44) அல்குலின் பரப்புக்கு ஆசையின் பரப்பைக் கூறியது சிறியதனைப்
பெருக்கிற்று. உசா - ஆராய்ச்சி. ஆராய்ச்சியைப் பேதைக்கு உரைப்பவனுக்குப் பிழை
பெருகும். `குயம் பிழைப்பிற் பெருகினவேழு என்பதும் சிறியதனைப் பெருக்கிற்று.
நுட்பமான ஆராய்ச்சி இடைக்கு உவமை.
 
     (பி - ம்.) 39. யென்ப. 40. கண்டுகொளாதாயினுங். 41. லகன்றதேயல் குலுஞ்
சான்றோர்