| '(45) பொன்மலி கச்சி பூமலி கூடல் மாரி யீகை மணிமாடம்' |
இவை சிறியதனைப் பெருக்கின. அடியின்றி நடப்பனவும் ஓரடியால் நடப்பனவும் இனி அடியின்றி நடப்பன பாட்டும், உரையும், நூலும், மந்திரமும், (46) பிசியும், முது சொல்லும், அங்கதமும், வாழ்த்தும் முதலாயினவெனக் கொள்க. என்னை? |
| 'உரையு நூலு மடியின்றி நடப்பினும் வரைவில வென்ப வாய்மொழிப் புலவர்'
'வாய்மொழி பிசியே யங்கத முதுசொலென் றாயவை நான்கு மன்ன வென்ப.' |
பாட்டும் உரையும் நூலும் மந்திரமும் பிசியும் முது சொல்லும் அங்கதமும் என்றிவை பிறவும் ஓரடியானும் பலவடியானும் வரப் பெறு மெனக் கொள்க. என்னை?
|
| 'செயிர்தீர் செய்யுட் டெரியுங் காலை அடியி னீட்டத் தழகுபெற் றியலும்'
'ஓரடி யானும்வந் தொரோவிடத் தியலும்'
'அவை தாம்.
பாட்டுரை நூலே மந்திரம் பிசியே முதுசொ லங்கதம் வாழ்த்தொடு பிறவும் ஆகு மென்ப வறிந்திசி னோரே' |
என்றார் ஆகலின். |
இவை அடியின்றி நடப்பனவும் ஓரடியால் நடப்பனவுஞ் சொன்னவாறு. |
(8) |
|
(45) கச்சி, கூடல், ஈகை, மாடம் இவற்றைப் புனைந்துரை வகையாற் பெரிதும் புகழ்தலின் சிறியவற்றைப் பெருக்கின.
(16) பிசி - பிதிர். முதுசொல் - பழமொழி. அங்கதம் - வசை. |
_ _ _ |