20

யாப்பருங்கலக் காரிகை

 
  ['நெடில்குறி றனியா நின்றுமொற் றடுத்தும்
நடைபெறு நேரசை நால்வகை யானே'
'குறிலிணை குறினெடி றனித்துமொற் றடுத்தும்
நெறிமையி னான்காய் வருநிரை யசையே'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 6, 8,)]
 
     'வேய்புரையும் மென்தோளி' எ-து. மகடூஉ முன்னிலை.
 
     'உதாரணம் ஆழி வெள் வேல் வெறியே சுறா நிறம் விண்தோய் விளாம் என்று
வேண்டுவரே' எ-து. நேரசைக்கு உதாரணம் ஆ, ழி, வெள், வேல் எனவும்,
நிரையசைக்கு உதாரணம் வெறி, சுறா, நிறம், விளாம் எனவும் சொல்லுவர் புலவர் எ-று.
(3) அகலம் உரையிற் கொள்க. அகலம் எனினும் விரித்துரை எனினும் ஒக்கும்.
என்னை?
 
அகல மென்ப தாசறக் கிளப்பின்
விகல மின்றி விரித்துரைப் பதுவே'
 
என்றார் ஆகலின்.
 
     'விண்டோய் விளாம்' என்று சிறப்பித்தவதனால் நேரசை ஓரலகு பெறும்;
நிரையசை ஈரலகு பெறும் எனக் கொள்க.
 

வரலாறு

     ஆ - எனத் தனிநெடில் நேரசை ஆயினவாறு; ழி - எனத் தனிக்குறில் நேரசை
ஆயினவாறு; வெள் - எனக் குற்றெழுத்து ஒற்றடுத்து நேரசை ஆயினவாறு; வேல் -
என நெட்டெழுத்து ஒற்றடுத்து நேரசை ஆயினவாறு; வெறி - எனக் குறில் இணைந்து
நிரையசை ஆயினவாறு; சுறா - எனக் குறினெடில் இணைந்து நிரையசை ஆயினவாறு;
நிறம் - எனக் குறில் இணைந்து ஒற்றடுத்து நிரையசை ஆயினவாறு, விளாம் - எனக்
குறினெடில் இணைந்து ஒற்றடுத்து நிரையசை ஆயினவாறு
 

     (3) அகலம் - விருத்தியுரை; என்றது யாப்பருங்கல விருத்தியை; 12-ஆங் காரிகை
யுரையுள்ளும் இங்ஙனமே கூறுவர்; பலவிடங்களில் இங்ஙனமன்றி 'அவை யாப்பருங்கல
விருத்தியுட் கண்டுகொள்க.' என்றும் கூறுவர்.