ஒழிபியல் 'எழுத்துப் பதின்மூன்'

201

 
      சொற்குற்றமாவது சொல்லதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?
 
  'சொல்லின் வழுவே சொல்லோத்து மரபிற்
சொல்லிய குற்றந் தோன்ற லாகும்'
என்றார் ஆகலின்.
 

வரலாறு

வெண்பா

  * 'இசையெலாங் கொட்ட வெழிற்றானை யூர்ந்து
வசையில்லா மன்னர்வந் தேத்த - மிசையும்
அடிசில் பருகி யணியார்த்துப் போந்தான்
கொடிமதிற் கூடலார் கோ.'
 
     இதனுள், 'இசையெலாம் ஆர்ப்ப' எனவும், 'தானை நாப்பண்' எனவும், 'அடிசில்
அயின்று' எனவும், 'அணி அணிந்து' எனவும் இவ்வாறு பொதுவினால் எடுத்துக்
காட்டிப் பொதுவினால் முடிக்கற் பாலனவற்றைச் சிறப்பு வினையால் ஒன்றற்குரிய சிறப்பு
வினை புணர்த்தமையாற் சொற்குற்றமாயிற்று. என்னை?
     'வேறுவினைப் பொதுச்சொ 5லொருவினை கிளவார்' என்றார் ஆகலின் (தொல்.
சொல். சூ. 46)

     பொருட்குற்றமாவது : பொருளதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை?

     ? 'பொருளின் வழுவே தமிழ்நடைத் திரிவே'என்றார் ஆகலின்.
 

     * கொட்டுதல் தோற்கருவியை. ஊர்தல் கரியையும் பரியையும். பருகுவது நீர்,
 பால் போன்ற பொருள்களை, ஆர்த்தல் கழல் போன்றவற்றை. அங்ஙனமாகப்
பொதுவினால் எடுத்துக் காட்டப்பட்ட வற்றிற்குச்சிறப்பு வினைகளைத் தந்து
முடித்ததனால் இப்பாட்டுச் சொற்குற்ற முடையதாகும்.

     ? அகமும் புறமுமாகிய பொருள் தமிழுக்கே உரியதாகலின் அதனைத் தமிழ்நடை'
என்றார்' 'தமிழ்நெறி விளக்கம்' என்ற நூற்பெயரையுங் காண்க.
 

     (பி - ம்.) 5. லொரூஉ வினை.