வரலாறு |
வெண்பா |
| * 'முன்னுந் தொழத்தோன்றி முள்ளெயிற்றா யத்திசையே இன்னுந் தொழத்தோன்றிற் 6றேயதுகாண் - மன்னும் பொருகளிமால் யானைப் 7புகார்க்கிள்ளி பூண்போற் பொருகொளியான் மிக்க பிறை.' |
இது நாண நாட்டம். |
வெண்பா |
| ? 'பண்டிப் புனத்துப் பகலிடத் தேனலுட் கண்டிக் களிற்றை யறிவன்மற் - றிண்டிக் கதிரவன் பழையனூர்க் கார்நீலக் கண்ணாய் உதிர முடைத்திதன் கோடு.' |
இது நடுங்க நாட்டம். |
இதுவும் பொருளதிகாரத்தோடு மாறுகொண்டமையாற் பொருட்குற்றமாயிற்று. என்னை? |
| 'நாணவு நடுங்கவு 8நாடா டோழி காணுங் காலைத் தலைமக டேத்தே' |
என்றார் ஆகலின். |
நேரிசை யாசிரியப்பா |
| ? 'வாளை மேய்ந்த வளைகோட்டுக் குதிரை கோழிலை வாழைக் கொழுமட லுறங்கும் |
|
* நாண நாட்டம் - தலைவி நாணும்படி தோழி அத் தலைவிக்குத் தலைவன் பாலுள்ள உறவை ஆராய்தல். கன்னிப்பெண்கள் பிறை தொழுதல் மரபு களவிற் றலைமகனைச் சேர்ந்த தலைவி பிறையைத் தொழாள். மேற்கவியில் 'பிறை இன்னுந் தொழத் தோன்றிற்றே' என்று தோழி குறிப்பித்தது நாண நாட்டமாம். ? 'களவில் வந்து செல்லும் நம் தலைவனுக்கு இக்களிற்றால் துன்பம் விளைந்ததோ' என்று தலைவி அஞ்சி நடுங்கும்படி தோழி 'களிற்றின் கோடு உதிர முடைத்து' என்றமையின் இது நடுங்க நாட்டம். ? 'வாளை மேய்ந்த' என்றதும், 'தேரை வாலினும் பெரிதாகின்று' என்றதும் பொருள் மாட்சி யற்ற தொடர்களாம். |
|
(பி - ம்.) 6. றீதேகாண். 7. புகழ்க்கிள்ளி. 8. நாட்டுழி யிடத்துக்..... டொக்கே. |