| 9ஊரன் செய்த கேண்மை தேரை வாலினும் 10பெரிதா கின்றே.' |
இதுவும் பொருள் 11மாண்ட தின்மையாற் பொருட்குற்றம்.
யாப்புக் குற்றமாவது : யாப்பதிகாரத்தோடு மாறு கொள்வது. என்னை? |
| 'யாப்பின் வழுவே யாப்பின திலக்கணங் 12கோப்பின் வாராக் கோவைத் தாகும்' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
| 'கானக நாடன் 13கடுங்கோன் பெருமலைமேல் ஆனை கிடந்தனபோ லாய பெருங்கற்கள் தாமே கிடந்தன கொல்லோ வவற்றைப்பெற்றிப் பிறங்கவைத் தாரு முளர்கொல்லோ.' |
இது முதலெடுத்துக் கொண்ட ஓசையிற் கெட்டுப் பாவிகற்பக் * கட்டுரையான் வந்தமையால் யாப்புக் குற்றமாயிற்று.
அலங்காரக் குற்றம் வருமாறு : |
வெண்பா |
| 'வெண்டினங்கள் போன்றிலங்கு வெண்சங்கு 14வெண்சங்கம் விண்டன்ன தாழை வளர்தொடு - கொண்டெங்கும் கள்ளாவி நாறுங் கருங்கழிசூழ் கானத்தெம் உள்ளாவி வாட்டு முருவு.' |
இதனுள், 'வெண்டிங்கள் போலும் சங்கு, சங்கு போலும் தாழைப்பூ' என்று உவமைக்கு உவமை சொன்னமையால் அடுத்து வரல் உவமை என்னும் அலங்காரக் குற்ற மாயிற்று. என்னை? |
|
* கட்டுரை - வசனம். |
|
(பி - ம்.) 9. சோழ நாடன் கேண்மை. 10. போதாதன்றே.11. தீர்ந்த தின்மையாற், திரண்ட தின்மையாற். 12. கோப்ப வாராக் கொள்கைத். 13. கடுங்கோட்டுப். 14. சங்கனைய, வண்டிலங்கு.....விண்டெங்கும். |