204

யாப்பருங்கலக் காரிகை

 
  'அடுத்துவர லுவமை யில்லென மொழிப'
என்றார் ஆகலின்.
 
     இனி ஆனந்தக் குற்றம் வருமாறு :
[15 இயனெறி திரிந்த வெழுத்தா னந்தமும்
சொன்னெறி திரிந்த சொல்லா னந்தமும்
பொருணிலை திரிந்த பொருளா னந்தமும்
தூக்குநிலை திரிந்த தூக்கா னந்தமும்
தொடைநிலை திரிந்த தொடையா னந்தமும்
நடையுறு புலவர் நாட்டிய வகையே'
என்றார் ஆகலின்.]
 
* 'ஆழி யிழைப்பப் பகல்போ மிரவெல்லாந்
தோழி துணையாத் 16துயர்தீரும் - வாழி
நறுமாலை தாராய் திரையவோஒ 17வென்னும்
செறுமாலை சென்றணைந்த போது.'
 
     இதனுள் 'திரையவோஒ' என்புழி இயற்பேர் சார்த்தி எழுத்து அளபெழுந்தமையால்
எழுத்தானந்தம். என்னை?
 
 
'இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே
18 இயற்பா டில்லா வெழுத்தா னந்தம்'
 
என்றார் ஆகலின், இனிச் சொல்லானந்தம் வருமாறு :
 

வெண்பா

? 'என்னிற் பொலிந்த திவண்முக மென்றெண்ணித்
தன்னிற் 19குறைபடுப்பான் றண்மதியம் - மின்னி
விரிந்திலங்கு வெண்குடைச் செங்கோல் விசையன்
எரிந்திலங்கு வேலி னெழும்.'
 

     * ஆழி இழைப்ப - தரையில் கூடலைக் கிழிப்பதனால்.

      ? குறைபடுப்பான் - குறையை உண்டாக்கும் பொருட்டு. மதியம் வேலின் எழும்.
 

     (பி - ம்.) 15. எழுத்தியறிரிந்த. 16. துயர்தீர்வன், துயில் தீரும். 17. வென்பன்.
18. இயற்பட லில்லா. 19. குறைபடுவான்.