ஒழிபியல் 'எழுத்துப் பதின்மூன்'

205

 
     இதனுள், விசைய னென்னும் பாட்டுடைத் தலைமகன் மேல் எரிந்தென்னும்
சொல்லேறப் புணர்த்தமையாற் சொல்லானந்த மாயிற்று. என்னை?
 
'இயற்பெயர் மருங்கின் மங்கல மழியத்
தொழிற்சொற் புணர்ப்பினது சொல்லா னந்தம்'
 
என்றார் ஆகலின். இனிப் பொருளானந்தம் வருமாறு :
 

வெண்பா

  'இந்திரனே போலு மிளஞ்சாத்தன் சாத்தற்கு
மந்தரமே போன்றுளது மல்லாகம் - மந்தரத்திற்
றாழருவி போன்றுளது தார்மாலை யம்மாலை
ஏழுலகு நாறு மிணர்.'
 
     இதனுள் இளஞ்சாத்தன் என்னும் கீழ்மகனை அரசரை உவ மிக்குமாறு போலப் *
பரிக்கலாகா வண்ணம் இறப்ப உயரச் சொன்னமையால் இறப்ப உயர்ந்த
பொருளானந்தம்.
 
? 'கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
அருவிடர் வீழ்ந்தென'
 
     இதனுள் ஐந்திணைக்குரிய பொருளை இறப்ப இழிவுபடச் சொன்னமையால் இறப்ப
விழிந்த பொருளானந்தம். என்னை?
 
  'இறப்ப வுயர்ந்தது மிறப்ப விழிந்ததும்
அறத்தக வழீஇய வானந் தம்மே'
 
என்றார் ஆகலின்,

     பிற ஆனந்தங்களும் வந்தவழிக் கண்டுகொள்க.

     இனி, எல்லாக் குற்றமும் தீர்ந்த செய்யுள் வருமாறு :
 

நேரிசை யாசிரியப்பா

  'தாமரை புரையுங் காமர் சேவடி
பவழத் தன்ன மேனித் திகழொளிக்
 

     * பரிக்கலாகர வண்ணம் - தாங்க முடியாதபடி.

     ? இவை மலைபடு கடாம். 311 - 12 - இன் பாடபேதம். யா. வி. பக். 520. பார்க்க.
குறிஞ்சியின் கருப் பொருளாகிய குரங்குக்கு விடரில் விழுதல் இழிவாதல் பற்றி இது
இறப்ப விழிந்த பொருளானந்தமாயிற்று.