உறுப்பியல் 'குறிலே நெடிலே'

21

 
     இனி அவற்றுக்குச் செய்யுள் வருமாறு :
 
'(4) போது சாந்தம் பொற்ப வேந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானந் துன்னு வாரே.'
 
     இது (5) நேரசை நான்கும் வந்த செய்யுள்.
 
  '(6) 1அணிநிழ லசோகமர்ந் தருணெறி நடாத்திய
2மணிதிக ழவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.'
 
     இது (7) நிரையசை நான்கும் வந்த செய்யுள்.
 
'குறிலே நெடிலே குறிலிணை குறினெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரு நிரையு 3மென்றிசிற் பெயரே'
 
     என்றார் தொல்காப்பியனார் (பொருள். சூ. 315.)
 
 
'(8) கோழி வேந்த னேரசை நிரையசை
யாழ்புனல் 4வாழ்க்கை வெறிசுறா நிறங்குரால்'
 
என்று உதாரணம் எடுத்தோதினாரும் உளரெனக் கொள்க.
 
     'குறிலே நெடிலே' என்னும் இக்காரிகை தன்னையே இலக் கியமாக அலகிடினும்
இழுக்காதெனக் கொள்க.
 

(5)


     (4) போது - மலர், சாந்தம் - சந்தனம். பொற்ப - பொலிவுபெற, ஆதிநாதன் -
முதல் தீர்த்தங்கரர்.

     (5) நேரசை நான்காவன: குறிலும் நெடிலும் தனித்து வருவன இரண்டு, ஒற்றொடு
வருவன இரண்டு.

     (6) வரதன் - அருகபரன், பவம் - பிறப்பு, பரிசு அறுந்தல் - பெருமையை
அழித்தல், பணிபவர் பிறப்பின் பெருமையை அழிப்பவர்.

     (7) நிரையசை நான்காவன : குறிலிணையும் குறினெடிலும் தனித்து வருவன
இரண்டு, ஒற்றொடு வருவன இரண்டு.

     (8) ஆ, ழி, வெள், வேல் - வெறி, சுறா, நிறம், விளாம் என்று இவ்வாசிரியர்
காட்டியவாறு கோழி வேந்தன்....குரால் என்று பிறசொற்களை உதாரணம் காட்டினாரும்
உளர் என்பதற்கு. இது மேற்கோள். கோ - ழி : வேந் - தன் - இந்நான்கும் நேரசை.
வெறி சுறா; நிறம் - குரால் - இந்நான்கும் நிரையசை.
 

    (பி - ம்.) 1. அணிகிளரசோ. 2. மணி நிழ லவி. 3. மென்றிசி னோரே. 4. வேட்கை.